( ஆர் . ராம் )
காணாமல்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு வடக்கில் தனது விசாரணை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அதன்படி இன்றைய முதலாவது விசாரண யாழ்ப்பாணம் கச்சேரி கேட்போர் கூடத்தில் இடம்பெறுகின்றது. இதில் கலந்து கொள்வதற்காக 200 முதல் 300 பேர் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
காணாமல்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு வடக்கில் தனது விசாரணை நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்வதற்காக கச்சேரி கேட்போர் கூடத்தில் 5 பகுதிகளாக பிரிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
குறித்த விசாரணை நடவடிக்கைகள் இன்று 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் 16 ஆம் திகதி புதன்கிழமை வரை வடக்கில் இடம்பெறவுள்ளது.
யாழ். மாவட்டசெயலகத்தில் இன்று 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை இடம்பெறும் அமர்வில் நல்லூர் பிரதேச சபையைச் சேர்ந்தவர்களும் 12 ஆம் திகதி சனிக்கிழமை காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை யாழ். மாவட்டசெயலகத்தில் இடம்பெறும் அமர்வில் யாழ்.பிரதேச சபையைச் சேர்ந்தவர்களும் 13 ஆம் திகதி காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் இடம்பெறும் அமர்வில் கரவெட்டி மற்றும் மருதங்கேணி பிரதேசபைகளைச் சேர்ந்தவர்களும் 14 ஆம் திகதி காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் இடம்பெறும் அமர்வில் வடமராட்சி வடக்கு பிரதேச சபையை சேர்ந்தவர்களும் 15 ஆம் திகதி காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை சங்கானை பிரதேச செயலகத்தில் இடம்பெறும் அமர்வில் சண்டிலிப்பாய் மற்றும் சங்கானை பிரதேச சபைகளைச் சேர்ந்தவர்களும் 16 ஆம் திகதி காலை 8.30 மணி முதல் மாலை 4 மணி வரை தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் இடம்பெறும் அமர்வில் உடுவில் மற்றும் தெல்லிப்பளை பிரதேச சபைகளைச் சேர்ந்தவர்களும் கலந்துகொண்டு தமது முறைப்பாடுகளை சமர்ப்பிக்க முடியும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM