Published by T. Saranya on 2020-10-22 16:42:49
முல்லைத்தீவு விசுவமடு பகுதியில் இன்று குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புத்தடி விசுவமடுவை சேர்ந்த இராமலிங்கம் நடேசன் வயது-55 என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவரது சடலம் தற்போது கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை புதுக்குடி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.