ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளின் சிக்கல்கள் தொடர்பில் ஆராய விசேட குழு

Published By: Digital Desk 3

22 Oct, 2020 | 01:46 PM
image

(செ.தேன்மொழி)

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் காணப்படும் சிக்கல்கள் தொடர்பில் விளக்கங்களை பெற்றுக் கொள்வதற்காக  பொலிஸ் அத்தியட்சகர்கள்  நால்வரை கடமையில் ஈடுபடுத்தியிருப்பதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

கொரோனா வைரஸ் கொத்தணி காரணமாக தனிமைப்படுத்தல் மற்றும் தொற்று நீக்க சட்டவிதிகளுக்கமைய ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய கம்பஹா மாவட்டத்தில் 33 பொலிஸ் பிரிவுகளிலும்,கொழும்பு மாவட்டத்தில் 5 பொலிஸ் பிரிவுகளிலும்,குளியாப்பிட்டி பகுதியில் 5 பொலிஸ் பிரிவுகளிலும் தொடர்ந்தும் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளது.

இந்தக் காலப்பகுதியில்  அத்தியவசிய சேவை நிலையங்களில் பணிபுரிவோர்,ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலரும், தொழிற்சாலைகளும் செயற்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  இதன்போது அவர்களது அனுமதி பாத்திரங்கள் மற்றும் தொழிற்சாலைகளின் செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளமை அவதானிக்க கூடியதாக உள்ளது.

இந்நிலையில் , இதுதொடர்பில் அவதானம் செலுத்திய மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தேசபந்து தென்னகோன் அந்த விடயங்கள் தொடர்பில் மக்களுக்கு தெளிவுப்படுத்துவதற்காக பொலிஸ் அத்தயட்சகர்கள் நால்வரை கடமையில் ஈடுப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள களனி,கம்பஹா,நீர்கொழும்பு மற்றும் கொழும்பு வடக்கு பொலிஸ் பிரிவுகளிலே இந்த விசேட அதிகாரிகள் சேவையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர். அதற்கமைய, களனி பொலிஸ் பிரிவுகளுக்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.ஆர்.ஏ.குணரத்ன கடமையில்  ஈடுப்படுத்தப்பட்டுள்ளார். 071-8591605 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்புக் கொண்டு அவருடம் ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள முடியும்.

இதேவேளை, கம்பஹா மாவட்ட பொலிஸ் பிரிவுகளில் இருப்பவர்கள் 071-8591610 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக உதவி பொலிஸ் அத்தியட்சகர் துஷித்த குமாரவையும்,நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுகளில் இருப்பவர்கள் 071-8591632 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்புக் கொண்டு பொலிஸ் அத்தியட்சகர் பாலித்த அமரதுங்கவையும், வட கொழும்பு பொலிஸ் பிரிவுகளில் இருப்பவர்கள் 071-8591574 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொண்டு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிரஞ்சன் அபேவர்தனவையும் தொடர்பு கொண்டு தங்களுக்கு  அவசியமான தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும்.

அதற்கமைய அத்தியவசிய சேவையாளர்கள்,ஊடகவியலாளர்கள்,தொழிற்சாலை உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் மாத்திரமின்றி ,திருமண நிகழ்வுகள் உள்ளிட்ட நிகழ்வுகள் மற்றும் விழாக்களை நடத்த எதிர்ப்பார்த்திருப்பவர்களுக்கும் மேற்படி விடயங்கள் தொடர்பில் சந்தேகங்கள் காணப்பட்டால் அது தொடர்பிலும் இந்த அதிகாரிகளிடம் ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள முடியும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19