மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை முனாயக்காடு களப்பு பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த ரி 56 துப்பாக்கி மற்றும் 50 ரவைகள் வவுணதீவு விசேட அதிரடிப்படையினரால் இன்று (21) புதன்கிழமை அதிகாலை மீட்கப்பட்டுள்ளது.
வவுணதீவு விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கமைய மட்டக்களப்பு தளபதி உதவி பொலிஸ்; அத்தியட்சகரின் ஆலோசனைக்கமைய வவுணதீவு விசேட அதிரடிப்படை பொறுப்பதிகாரி தலைமையிலான விசேட அதிரடிப்படையினர் குறித்த பகுதியில் உரைப்பை ஒன்றில் சுற்றி கைவிடப்பட் நிலையில் ரி.56 ரக துப்பாக்கி ஒன்றையும் 2 மகசீன்களையும் 50 ரவைகளையும் மீட்டுள்ளனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட துப்பாக்கி மற்றும் ரவைகளை கொக்கட்டிச்சோலை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டுவருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM