சட்ட விரோதமாக மதுபானம் தயாரித்த வெளிநாட்டு பிரஜை உட்பட மூவர் கைது

Published By: Digital Desk 4

19 Oct, 2020 | 11:17 AM
image

கொள்ளுப்பிட்டிய பகுதியில் சட்ட விரோத மதுபான தயாரிப்பு நிலையமொன்று முற்றுகையிடப்பட்டு மதுபானம் மற்றும் சிகரெட்டுக்களுடன் வெளிநாட்டு பிரஜையொருவர் மற்றும் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

கொள்ளுப்பிட்டிய பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய நேற்று ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பிலேயே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சட்ட விரோத மதுபான தயாரிப்பு நிலையத்திலிருந்து 40 லீற்றர் சட்ட விரோத மதுபானம், 888 லீற்றர் கோடா, சட்ட விரோதமாகக் கொண்டு வரப்பட்ட 920 சிகரெட்டுக்கள், தகரங்கள் 2, 3 எரிவாயு அடுப்புகள் மற்றும் 55 கிலோ அரிசி ஆகியன கைப்பற்றப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

சுற்றிவளைப்பின் போது 44 மற்றும் 54 வயதுடைய பெண்கள் இருவரும் 35 வயது மதிக்கத்தக்க வெளிநாட்டு  பிரஜையொருவருமே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொலன்னறுவையில் காட்டு யானை தாக்கி ஒருவர்...

2025-01-22 14:28:32
news-image

உடன்பிறந்த அண்ணனை கத்தியால் குத்திக் கொன்ற...

2025-01-22 14:10:47
news-image

வெள்ளவத்தையில் பெண் கடத்தல் ;  முன்னாள்...

2025-01-22 13:47:52
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-01-22 13:26:40
news-image

பாடசாலை மாணவி கடத்தல் ;  பதில்...

2025-01-22 13:23:20
news-image

யாழில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய வர்த்தக...

2025-01-22 13:23:42
news-image

அர்ஜூனமகேந்திரனை இலங்கைக்கு கொண்டுவருவதில் சிக்கல்களை எதிர்கொள்கின்றோம்...

2025-01-22 13:08:48
news-image

சிறைச்சாலை கைதிக்கு புகையிலைகளை கொண்டு சென்றவர்...

2025-01-22 13:03:48
news-image

முச்சக்கர வண்டி சாரதியை தடுத்துவைத்து சித்திரவதை...

2025-01-22 12:55:09
news-image

இலங்கையில் பதில் துணைவேந்தர்களுடன் இயங்கும் பல்கலைக்கழகங்களின்...

2025-01-22 12:58:57
news-image

களுத்துறை தேவாலயத்தில் பெறுமதியான சிலைகள் திருட்டு...

2025-01-22 12:36:59
news-image

திருகோணாமலை - மூதூரின் தாழ் நிலப்பகுதிகள்...

2025-01-22 12:44:35