கொரோனா தொற்றுக்குள்ளான ஊடகவியலாளர் தனது பி.சி.ஆர் சோதனையின் முடிவுகள் வெளிவருவதற்கு முன்பாக பல ஊடகவியலாளர் சந்திப்புகளில் கலந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டுகள் குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்திடம் கோரியுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் அறிக்கை,
குறித்த ஊடகவியலாளருக்கும் அவரது சகாக்களுக்கும் திங்களன்று (12) பி.சி.ஆர் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளமை கட்சியின் கவனத்திற்கு வந்துள்ளது. இந்த சோதனைகளின் முடிவுகளுக்காகக் காத்திருக்கும் வேளையில், இந்த ஊடகவியலாளர் புதன்கிழமை (14) ஐ.நா. செய்தியாளர் சந்திப்பு மற்றும் அமைச்சரவை மாநாடு உள்ளிட்ட பல ஊடகவியலாளர் சந்திப்புகளுக்கு அரசு நடத்தும் தொலைக்காட்சி சேவையால் அனுப்பப்பட்டனர்.
இலங்கை COVID-19 இன் இரண்டாவது அலைகளை எதிர்கொண்டுள்ள நிலையில், பி.சி.ஆர் சோதனையின் முடிவுகளுக்காக காத்திருக்கும்போது ஒரு அரசு ஊழியரை பொதுமக்கள் மத்தியில் பயணிக்க அனுமதிக்க அரசு அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் மிகவும் பொறுப்பற்றவை. இந்த தவறுக்கு காரணமானவர்கள் மீது தேவையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வது அரசாங்கத்தின் கடமையாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM