ஐ.பி.எல்., தொடரில் விளையாடும் கொல்கத்தா அணித்தலைவர் பதவியிலிருந்து தினேஷ் கார்த்திக் விலகியுள்ளார். மேலும், அணித்தலைவர் பொறுப்பை இங்கிலாந்தின் இயான் மோர்கனுக்கு வழங்கும்படி அறிவுறுத்தியுள்ளார்.
தினேஷ் கார்த்திக், இயான் மோர்கன்
ஐ.பி.எல்., தொடரின் 13 ஆவது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகிறது.
இதில், தினேஷ் கார்த்திக் தலைமையில் கொல்கத்தா அணி, விளையாடிய 6 போட்டிகளில் 4 இல் வெற்றி 2 இல் தோல்வியை சந்தித்து 8 புள்ளிகளுடன் பட்டியலில் 3 ஆவது இடத்தில் உள்ளது. இன்று அந்த அணி, மும்பை அணியை எதிர்கொள்ள உள்ளது.
இந்நிலையில், கொல்கத்தா அணித்தலைவர் பதவியிலிருந்து தினேஷ் கார்த்திக் விலகியுள்ளார்.
துடுப்பாட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்த விரும்புவதால் அணித்தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ள அவர், அடுத்த அணித்தலைவராக இங்கிலாந்தின் இயான் மோர்கனை நியமிக்கும்படி அறிவுறுத்தியுள்ளார்.
கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், கோப்பை வென்ற இங்கிலாந்து அணித்தலைவராக இயான் மோர்கன் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM