பிரபல பொலிவூட் பாடகர் குமார் சானுவுக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பொலிவூட் சினிமாவின் முன்னணிப் பாடகர்களுள் ஒருவரான குமார் சானு இந்தி, மராத்தி, போஜ்புரி, தெலுங்கு, உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார்.
சாஜன் என்ற இந்திப் படத்தின் தமிழ் டப்பிங் படத்தில் தமிழிலும் கூட சில பாடல்களைப் பாடியுள்ளார்.
உலகம் முழுவதும் பல்வேறு விருதுகளை குமார் சானு பெற்றுள்ளார். 2009 ஆம் ஆண்டு இந்திய மத்திய அரசு இவருக்கு ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கி கௌரவித்தது.
இந்நிலையில் குமார் சானு கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக அவரது அதிகாரபூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.
குமார் சானுவின் பேஸ்புக் பக்கத்தில், ''துரதிர்ஷ்டவசமாக சானுவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், குமார் சானு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரா அல்லது வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டாரா என்பது குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை.
குமார் சானு விரைவில் குணமடைய வேண்டி அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM