தனது 5 வயது மகளின் தாடையில் ஏற்பட்டிருந்த சாதாரண கட்டியை புற்றுநோய்க் கட்டி என தவறாக நினைத்து கடும் மன அழுத்தத்துக்கு உள்ளான தாயொருவர், அந்த மகளையும் தனது 20 மாத பெண் குழந்தையையும் கத்தியால் குத்திக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட விபரீத சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற இந்தச் சம்பவம் குறித்து பிரித்தானிய ஊடகங்கள் வியாழக்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.
தென் கிழக்கு போலந்தை பிறப்பிடமாகக் கொண்ட மார்த்தா கல்கொவ்ஸ்கா (28 வயது) என்ற பெண்ணே இவ்வாறு தனது மகள்மாரான மாஜாவையும் ஒல்காவையும் படுகொலை செய்து விட்டு தன்னைத் தானே கத்தியால் குத்தித் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மாஜாவின் தாடைப் பகுதியில் கட்டியை அவதானித்து மன அழுத்தத்துக்கு உள்ளான கல்கொவ்ஸ்கா, தனது மகள் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதை தாங்கிக் கொள்ள தன்னால் முடியாது எனவும் அதனால் தான் இரு மகள்மாரையும் கொன்று விட்டு தற்கொலை செய்யப் போவதாகவும் தனது கணவரிடம் தெரிவித்ததையடுத்து அவரது கணவர் அது தொடர்பில் பிரதேச சமூக அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.
இந்நிலையில் அவரை நேரில் சந்தித்த சமூக அதிகாரிகள் அவரால் அவரது பிள்ளைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடிய வாய்ப்பில்லை எனத் தெரிவித்து விட்டு சென்றிருந்தனர்.
அது முதல் மேற்படி படுகொலைகள் மற்றும் தற்கொலை இடம்பெறும் வரையான ஒரு வார காலப் பகுதியில் கல்கொவ்ஸ்கா மன அழுத்தத்தைத் தணிவிக்கும் மருந்துகளை உள்ௌடுத்து வந்துள்ளார்.
இந்த சம்பவத்தையடுத்து மாஜாவின் உடலைப் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்திய அதிகாரிகள், அவருக்கு ஏற்பட்டிருந்த கட்டி புற்றுநோய்க் கட்டியல்ல. அது சாதாரண கட்டி என்பதை அறிந்துள்ளனர்.
இந்த சம்பவத்தால் அந்தப் பிராந்தியத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM