சமய நிகழ்வில் கலந்துகொண்ட 12 பேருக்கு கொரோனா

Published By: Vishnu

15 Oct, 2020 | 06:44 PM
image

ரத்தொளுகமவில் நடைபெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்துகொண்ட 12 பேர் கொரானா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இவர்களுக்கான பி.சி.ஆர். சோதனைகள் திங்கட்கிழமை நடத்தப்பட்டுள்ளதுடன், அதன் முடிவுகள் இன்றைய தினம் வெளியாகியிருந்தன.

அம் முடிவுகளிலேயே 12 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ரத்தொளுகம பொது சுகாதார பரிசோதகர்கள் சுட்டிக்காட்டியுள்ளார். 

சமய நிகழாவில் கலந்துகொண்ட குழுவில் மேற்கண்ட 12 பேர் மாத்திரம் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், அவர்களும் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம் நோயாளர்களின் குடும்ப உறுப்பினர்களும் அவர்களின் குடியிருப்புகளுக்குள்ளேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் அடுத்த சில நாட்களில் பி.சி.ஆர் சோதனைகளுக்கும் உட்படுத்தப்படுவார்கள் என்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ள 12 பேரில் நான்கு பேர் ரத்தொளுமகவில் வசிப்பவர்கள், ஏனையவர்கள் கலவத்தை மற்றும் முதுவாடிய பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47