நுளம்புப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த விசேட திட்டம் - அதீத அவதானத்திற்குரிய 53 பகுதிகள் அடையாளம்

15 Oct, 2020 | 05:05 PM
image

(நா.தனுஜா)

தேசிய ரீதியில் நுளம்புப்பெருக்கத்தைத் தடுப்பதற்கான வாரத்தை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நுளம்புப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான விசேட செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சுகாதார மேம்பாட்டுப்பணியகம் தெரிவித்திருக்கிறது.

நாடளாவிய ரீதியில் பல்வேறு பகுதிகளிலும் அதிகரித்திருக்கும் மழைவீழ்ச்சியின் காரணமாக நுளம்புகளின் பெருக்கத்திலும் அதிகரிப்பொன்று அவதானிக்கப்பட்டுள்ளது. பல பிரதேசங்களில் நுளம்பு பெருக்கத்திற்கு ஏதுவான சூழல் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு நாடளாவிய ரீதியில் அதீத அவதானத்திற்குரிய 53 பகுதிகளும் அவதானத்திற்குரிய 147 பகுதிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இம்மாதம் 14 - 20 வரையான காலப்பகுதி தேசிய ரீதியில் நுளம்புப்பெருக்கத்தைத் தடுப்பதற்கான வாரமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மேற்படி பகுதிகளில் நுளம்புப் பெருக்கத்தைத் தடுப்பதற்கான விசேட செயற்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

எனினும் கொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காரணமாக கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் இச்செயற்திட்டம் முன்னெடுக்கப்பட மாட்டாது.

இலங்கையில் 1980 ஆம் ஆண்டிலிருந்து பல்வேறு காலப்பகுதியிலும் டெங்குநோய் ஒரு சுகாதார அச்சுறுத்தலாக மாறிவருவது அவதானிக்கப்பட்டிருக்கிறது. கடந்த வருட தரவுகளுடன் ஒப்பிடுகையில், இவ்வருடத்தில் அதே காலப்பகுதியில் அடையாளம் காணப்பட்ட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 50 சதவீதத்தினால் குறைந்திருக்கிறது. அதேவேளை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உள்ளடங்கலாக மேலும் சில மாவட்டங்களில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

மேலும் கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் பகுதிகளில் விரைவில் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய சாத்தியம் உயர்வாக இருப்பதாக சுகாதார மேம்பாட்டுப்பணியகம் தெரிவித்திருக்கிறது. அதேபோன்று கைத்தொழிற்சாலைகளில் 42.15 சதவீதமும் பாடசாலைகளில் 40.12 சதவீதமும் பொது இடங்களில் 40.96 சதவீதமும் வணக்கஸ்தலங்களில் 37.86 சதவீதமும் நுளம்பு பெருகுவதற்கான சாத்தியம் காணப்படுகிறது.

இந்நிலையில் நுளம்புப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான செயற்திட்டமானது கொவிட் - 19 பரவலைத் தடுப்பதற்கான சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக சுகாதாரப்பிரிவினர், பொலிஸார் உள்ளிட்ட தரப்பினரால் முன்னெடுக்கப்படும். அதன்படி அவர்கள் சுற்றாடலை பரிசோதிப்பதற்காக வருகைதருவார்கள் என்றும் அவர்களுக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றும் சுகாதார மேம்பாட்டுப்பணியகம் கேட்டுக்கொண்டுள்ளது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்னாள் பொலிஸ் அதிகாரி சம்பத் மானம்பேரி...

2026-09-12 16:16:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக்கின் தந்தைக்கு...

2026-09-12 16:01:07
news-image

மத்தள விமான நிலையத்தில் மான் வேட்டை:...

2026-09-12 15:45:08
news-image

தெஹிவளை கைகுண்டுத் தாக்குதல்: இலக்கு மாறியதால்...

2026-09-12 15:38:43
news-image

வீடு புகுந்து திருட்டு மற்றும் குற்றச்...

2026-09-12 15:16:55
news-image

26 நகரங்களை அபிவிருத்தி செய்ய 65...

2026-09-12 14:49:30
news-image

நல்லூரில் 45 பவுண் நகைகள் திருட்டு...

2026-09-12 15:13:56
news-image

தனமல்விலவில் 114 கிலோவிற்கும் அதிக கஞ்சாவுடன்...

2026-09-12 15:11:22
news-image

தனமல்வில வீதி விபத்து: நான்கு இளைஞர்கள்...

2026-09-12 14:48:44
news-image

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் வாகனங்களின் ‘ஸ்மார்ட் சாவிகள்’...

2026-09-12 14:56:17
news-image

சட்டவிரோத மீன்பிடி: இலங்கை கடற்படையினரின் விசேட...

2026-09-12 14:48:21
news-image

அரசாங்கத்தின் செயல்கள் ,வாக்குறுதிகள் நிறைவேற்றாமையை கண்டித்து...

2026-09-12 14:50:18