ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது  அரசாங்கத்தின் பிரதான கடமை - மஹிந்த அமரவீர

Published By: R. Kalaichelvan

15 Oct, 2020 | 01:16 PM
image

(எம்.மனோசித்ரா)

சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தப்படுவது குறித்து வேண்டிய இடங்களுக்குச் சென்று உண்மை தகவல்களை சேகரிப்பதற்கான உரிமை ஊடகவியலாளர்களுக்கு காணப்படுகிறது.

ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதை அரசாங்கத்தின் பிரதான கடமையாக கருதுகின்றோம் என்று சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

சுற்றாடல் அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

கடந்த வாரம் முல்லைத்தீவு மற்றும் மொனராகலை ஆகிய பிரதேசங்களில் சட்ட விரோத செயற்பாடுகள் தொடர்பில் தகவல் சேகரிப்பதற்காக சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஊடங்களில் வெளியான செய்திகள் மூலம் அறியக்கிடைத்தது. இது தொடர்பில் பதில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்துள்ளேன்.

இவ்வாறான செயற்பாடுகளுக்கு இனியொரு போதும் நாம் இடமளிக்கப் போவதில்லை. ஊடகவியலாளர்களுக்கு இவை தொடர்பில் ஆராய்வதற்கு உரிமையுள்ளது.

 அந்த உரிமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தப்பட மாட்டாது. சமூக வலைத்தள ஊடகவியலாளர்கள் சிலர் பொறுப்புடன் செயற்படாவிட்டாலும் பெரும்பாலான ஊடகவியலாளர்கள் மிகவும் பொறுப்புடன் செயற்படுகின்றனர்.

அவ்வாறானவர்களுக்கான அதற்கான இடமளிக்கப்பட வேண்டும்.

ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதை அரசாங்கத்தின் பிரதான கடமையாகக் கருதுகின்றோம். எனவே அவர்களுக்கு வேண்டிய இடங்களுக்குச் சென்று சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தப்படுவது குறித்து உண்மை தகவல்களை சேகரிக்க முடியும்.

அந்த வாய்ப்புக்களை நாம் நீக்கப் போவதில்லை. அதற்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவொரு நபருக்கு எதிராகவும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதிலிருந்து பின்வாங்கப் போவதில்லை. சில பலவந்தர்களும் தனவந்தர்களும் இருக்கலாம். அவர்களை நாம் கவனத்தில் எடுக்கப் போவதில்லை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56