(எம்.மனோசித்ரா)
சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தப்படுவது குறித்து வேண்டிய இடங்களுக்குச் சென்று உண்மை தகவல்களை சேகரிப்பதற்கான உரிமை ஊடகவியலாளர்களுக்கு காணப்படுகிறது.
ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதை அரசாங்கத்தின் பிரதான கடமையாக கருதுகின்றோம் என்று சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
சுற்றாடல் அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
கடந்த வாரம் முல்லைத்தீவு மற்றும் மொனராகலை ஆகிய பிரதேசங்களில் சட்ட விரோத செயற்பாடுகள் தொடர்பில் தகவல் சேகரிப்பதற்காக சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஊடங்களில் வெளியான செய்திகள் மூலம் அறியக்கிடைத்தது. இது தொடர்பில் பதில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்துள்ளேன்.
இவ்வாறான செயற்பாடுகளுக்கு இனியொரு போதும் நாம் இடமளிக்கப் போவதில்லை. ஊடகவியலாளர்களுக்கு இவை தொடர்பில் ஆராய்வதற்கு உரிமையுள்ளது.
அந்த உரிமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தப்பட மாட்டாது. சமூக வலைத்தள ஊடகவியலாளர்கள் சிலர் பொறுப்புடன் செயற்படாவிட்டாலும் பெரும்பாலான ஊடகவியலாளர்கள் மிகவும் பொறுப்புடன் செயற்படுகின்றனர்.
அவ்வாறானவர்களுக்கான அதற்கான இடமளிக்கப்பட வேண்டும்.
ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதை அரசாங்கத்தின் பிரதான கடமையாகக் கருதுகின்றோம். எனவே அவர்களுக்கு வேண்டிய இடங்களுக்குச் சென்று சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தப்படுவது குறித்து உண்மை தகவல்களை சேகரிக்க முடியும்.
அந்த வாய்ப்புக்களை நாம் நீக்கப் போவதில்லை. அதற்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவொரு நபருக்கு எதிராகவும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதிலிருந்து பின்வாங்கப் போவதில்லை. சில பலவந்தர்களும் தனவந்தர்களும் இருக்கலாம். அவர்களை நாம் கவனத்தில் எடுக்கப் போவதில்லை என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM