ஒரு குழந்தையை உலகுக்குக் கொண்டுவருவது பெற்றோருக்கு ஒரு மகிழ்ச்சிகரமான விடயம். அந்த மகிழ்ச்சியான பயணத்தின் ஒவ்வொரு தருணத்தின் நினைவுகளையும் கர்ப்பம் முதல் குழந்தையின் வருகை வரையில் பெற்றோர் பதிவு செய்ய ஆசைபடுகின்றனர். அத்துடன் அவற்றை சமூக ஊடகங்களில் பகிர்ந்தும் மகிழ்கின்றார்கள்.
இவ்வாறு ஆசைபட்ட ஒரு கணவர், தனது மனைவி கர்ப்ப கால ஃபோட்டோஷூட்டை விரும்புவார் என்று நினைத்து, அவருக்கு தெரியாமலே கர்ப்பகால ஃபோட்டோஷூட்களுக்காக தொழில்முறை ஒப்பனை கலைஞர், ஒப்பனையாளர் மற்றும் புகைப்படக் கலைஞர்கள் என அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்துள்ளார்.
எனினும் அவரின் மனைவி அதனை விரும்பவில்லை, கர்ப்பகால படப்பிடிப்பை செய்ய மறுத்துவிட்டார்.
முன் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த படப்பிடிப்பிற்காக ஏற்கனவே குறித்த கணவர் செலுத்திய பணம் திரும்பக் கிடைக்காது. இதனையடுத்து தான் செலுத்திய பணத்தை வீணடிக்க விரும்பாத அவர் தானே கர்ப்பிணி பெண் போன்று ஒப்பனை மற்றும் அலங்காரம் செய்து கொண்டு படப்பிடிப்பை நடத்தியுள்ளார்.
இதில் இவர் குழந்தையை சுமக்காவிடினும், குழந்தையின் பெயரை தமது வயிற்றில் எழுதி ஒரு தாயின் உணர்வை வெளிபடுத்தியுள்ளார்.
இவரது இந்த படங்கள் சமூக ஊடகங்களில் பிரபலமாகியுள்ளதுடன் பலரும் தமது கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM