யாழ். இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டத்தரிப்பு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் சட்டவிரோதமான முறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 மதுபான போத்தல்களை இளவாலைப் பொலிஸார் நேற்றிரவு கைப்பற்றியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பண்டத்தரிப்பு நகரப் பகுதியிலுள்ள வீடொன்றில் மதுபான போத்தல்கள் சட்டவிரோதமான முறையில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும் அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும் பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் பண்டத்தரிப்பு நகரப் பகுதியில் உள்ள வீடு ஒன்று முற்றுகையிட்டு பொலிஸார் சோதனையிட்ட போது அங்கு 180 மில்லி லீட்டர் மதுபான போத்தல்கள் 50 மீட்கப்பட்டன.
மேலும் மதுபான போத்தல்களை பதுக்கி வைத்த வீட்டின் உரிமையாளரான 48 வயதுடைய சந்தேக நபரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை இளவாலைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM