ஊரடங்குச் சட்டத்தை மீறிய 124 பேர் கைது

Published By: Digital Desk 3

13 Oct, 2020 | 04:09 PM
image

(செ.தேன்மொழி)

தொற்று நீக்கல் சட்டவிதிகளுக்கமைய அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மீறிசெயற்பட்டதாக இதுவரையில் 124 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 34 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

கொரோனா வைரஸ் பரவல் கொத்தணியை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் கம்பஹா மாவட்டத்தில் 18 பொலிஸ் பிரிவுகளிலும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய கடந்த நான்காம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் இவ்வாறு ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் ஊரடங்குச் சட்டத்திற்கு புறம்பாக செயற்பட்டதாக நேற்று திங்கட்கிழமை காலை 6 மணி முதல் இன்று செவ்வாய்கிழமை காலை 6 மணிவரை மாத்திரம் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் போது இரண்டு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை , கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் இன்று காலை ஆறு மணிவரையில் ஊரடங்குச் சட்டத்தை மீறி செயற்பட்டதாக 124 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து  34 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

பொலிஸார் சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் , கொரோனா வைரஸ் பரவலினால் எதிர்நோக்க வேண்டி ஏற்படும் நெருக்கடி நிலைமைகளை கருத்திற் கொண்டு அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்திற்கு முழுமையான ஒத்துழைப்புகளை வழங்குமாறும் பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46