மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் கம்பஹாவைச் சேர்ந்த தாதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து வைத்தியசாலையில் அவர் கடமையாற்றிய ஒரு பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன் அங்கு கடமையாற்றிய தாதியர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
அத்துடன் அவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோனை மேற்கொள்ளவுள்ளதாகவும் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்தாகவும் தேவையில்லாமல் எவரும் வைத்தியசாலைகளுக்கோ வீதிகளிலோ செல்லவேண்டாம் எனவும் கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஏ.லதாகரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்; ஒருவருக்கு கொரோனா தொற்று என சமூகவலைத்தளங்களில் வெளிவந்த செய்தியையடுத்து மக்கள் பீதியடைந்தனர்.
இது தொடர்பாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஏ.லதாகரன் உடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
குறித்த தாதி மட்டு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றி வந்ததாகவும் கடந்த 4 ஆம் திகதி அவர் அவரது ஊரான கம்பஹாவிற்கு விடுமுறையில் சென்ற நிலையில் அவரது கணவனின் சகோதரி பிரன்டிக்ஸ் ஆடைத்தொழிற்சாலையில் வேலைபார்த்து வந்த நிலையில் அவரை பி.சிஆர் பரிசோதனைக்குட்படுத்திய போது அவருக்கு கொரோனா தொற்று கண்டுபிக்கப்பட்டது.
இதனையடுத்து அவரது குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு பரிசோதனையின் போது குறித்த தாதிக்கு கோரோனா தொற்றுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டு அவர் கொரோனா தொற்று சிகிச்சையளிக்கும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து குறித்த தாதி கடமையாற்றிய பிரிவு இன்று செவ்வாய்க்கிழமை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன் அவருடன் கடமையாற்றியவர்கள், தொடர்பில் இருந்தவர்கள் அடையாளம் காணப்பட்டதுடன் அவர்களை சுயதனிமைப்படுத்தலில் இருக்குமாறு அறிவுரை வழங்கியுள்ளதுடன் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டடுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே மக்கள் தேவையில்லாமல் பதற்றப்பட தேவையில்லை எனவும் முகக்கவசம் அணியுமாறும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுமாறும் பொது மக்கள் தேவையில்லாமல் வைத்தியசாலைக்கு செல்லவேண்டாம் என அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM