கொரோனா பரவலை தடுப்பதில் ஊடகங்களுக்கு கூடுதலான பொறுப்பு உண்டு: கெஹெலிய ரம்புக்வெல

Published By: J.G.Stephan

13 Oct, 2020 | 10:58 AM
image

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, குறித்த வைரஸ் பரவலை தடுப்பதில் ஊடகங்களுக்கு கூடுதலான பொறுப்பு உண்டு என அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் ஊடக நிறுவனங்கள் ஆற்றும் பணிகளை வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் பாராட்டியுள்ள அதேவேளை, மேற்படி தகவலையும் தெரிவித்துள்ளார். 

மக்களின் தனியுரிமையை பாதுகாப்பது தொடர்பாக செய்தி அறிக்கையிடல் பற்றிய பொது வேலைத்திட்டத்தை தயாரிப்பது அவசியமாகும். ஊடகங்கள் அறிந்தோ அறியாமலோ மக்களின் தனியுரிமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செய்திகளை வெளியிட்டுள்ளன. தனி மனித உரிமை, நோய் என்பன பற்றி அறிக்கையிடும் போது வரையறையுடன் செயற்படுவது அவசியமாகும். இதுபற்றிய வழிகாட்டல் விரைவில் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

மேலும், ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்க கருத்து தெரிவிக்கையில் , கொரோனா வைரஸ் தொடர்பான அறிக்கையிடல் ஊடகவியலாளர்களுக்கு சவால்மிக்கதாகும் என்று தெரிவித்தார்.

வைரஸ் பரவலை தடுப்பதற்காக பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கும் பொறுப்பு ஊடக நிறுவனங்களுக்கு இருப்பதாக கலந்துரையாடலில் கலந்து கொண்ட வெகுஜன ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் ஜகத் விஜயவீர தெரிவித்திருந்தமையும் குறிப்பிடதக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50