சிறுமி தூக்கிட்டு தற்கொலை : பொகவந்தலாவையில் சம்பவம்

Published By: Priyatharshan

10 Dec, 2015 | 04:44 PM
image

(க.கிஷாந்தன்)

பொகவந்தலாவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெம்பியன் தோட்ட ஓல்டி பிரிவில் சிறுமியொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.

 இச் சம்பவம் இன்று வியாழக்கிழமை பிற்பகல் இடம் பெற்றுள்ளது.

 

விக்னேஷ்வரன் சகுந்தலாதேவி என்ற 14 வயதுடைய சிறுமியே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தனது வீட்டிலேயே குறித்த சிறுமி   தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சிறுமி தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் இதுவரையிலும் கண்டறியபடவில்லையெனவும் சடலம் பொகவந்தலாவை வைத்தியசாலையின் பிரேத அறையில் பிரேத பரிசோதனைக்காக  வைக்கபட்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பிரேத பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15