தென்னமரவடியில் பாரியளவு நிலம் பௌத்த பிக்குவின் தலைமையில் தொல்லியல் திணைக்களத்தால் அபகரிப்பு !

Published By: Digital Desk 4

12 Oct, 2020 | 08:55 AM
image

திருகோணமலை மாவட்டத்திலுள்ள தமிழர் தாயக பிரதேசத்தை புவியியல் ரீதியாக பிரித்து நிற்கும் மையப்புள்ளியான தமிழ் மக்களின் பழமை வாய்ந்த கிராமமான தென்னைமரவடி கிராமத்தில் 358 ஏக்கர் நிலத்தை புல்மோட்டை அரிசிமலை பகுதியில் இருக்கின்ற பௌத்த பிக்குவின் வேண்டுகோளின் அடிப்படையில் தொல்லியல் திணைக்களம் சுவீகரித்து எல்லை கற்களை நாட்டியுள்ளதாக தென்னமரவடி மக்கள் தெரிவித்துள்ளனர் .

கடந்த மாதம் 24 ஆம் திகதி பனிக்கவயல் தொடக்கம் தென்னமரவடி வரையான 358 ஏக்கர் காணிகளை அபகரித்து தமிழ் மக்களுக்கு சொந்தமான வயல் நிலங்களையும் உள்ளடக்கி தொல்லியல் திணைக்களதால் எல்லை கற்கள் இடப்பட்டு வருவதை அறிந்து அப்பகுதிக்கு சென்ற தென்னமரவடி மக்கள் தொல்லியல் திணைக்கள உத்தியோகத்தர்களிடம் கேள்வி எழுப்பிய  நிலையில் அரிசிமலை பிக்குவின் வேண்டுகோளின் அடிப்படையில் தொல்லியல் பிரதேசமாக அடையாள படுத்தபட்டு எல்லை கற்கள் இடப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

செய்கை பண்ணுவதற்காக தயார் படுத்த பட்ட வயல்களுக்கு நடுவே கூட எல்லை கற்கள் நடப்பட்டுள்ளது. இவ்வாறு அபகரிக்க பட்ட 358 ஏக்கர் பரப்பில் தென்னமரவடி கிராமத்தின் ஆரம்பத்தில் பௌத்த விகாரை ஒன்றுக்கான ஆரம்ப கட்ட வேலைகளுக்கும் ஆரம்பிக்கபட்டு சிவில் பாதுகாப்பு படையினரும் பாதுகாப்புக்கு நிறுத்த பட்டுள்ளனர்.

இவ்வாறு பாரிய அளவிலான நிலம் கையக படுத்த பட்டுள்ளமையின் பின்னணியில் சிங்கள குடியேற்றம் ஒன்றுக்கான திட்டமாக இருக்கலாம் என கிராம மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழர் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் அரசாங்கத்தின்...

2025-02-15 16:38:58
news-image

சிவில் சமூக அமைப்புக்கள் மீதான அழுத்தங்கள்...

2025-02-15 16:38:19
news-image

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம்...

2025-02-15 14:38:44
news-image

நிலக்கரி, டீசல் மாபியாக்களை தலைதூக்கச் செய்து...

2025-02-15 16:37:11
news-image

உள்ளூராட்சி அதிகார சபைகள் சட்டமூலம் மீதான...

2025-02-15 20:33:34
news-image

முதலீட்டாளர்களை தக்க வைத்துக் கொள்ளாவிட்டால் வெளிநாட்டு...

2025-02-15 16:34:51
news-image

போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மக்களின் அரசாங்கத்தை...

2025-02-15 16:36:27
news-image

மீன்பிடி சட்டங்களை நடைமுறைப்படுத்தாமையால் தொடர்ந்தும் மீனவர்களுக்கு...

2025-02-15 17:52:46
news-image

அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மறைத்து...

2025-02-15 18:16:07
news-image

யாழில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார் பிரதமர்...

2025-02-15 17:51:55
news-image

விபத்தில் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன்...

2025-02-15 17:58:45
news-image

மன்னார் தீவில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும்...

2025-02-15 17:50:31