உயர்தர மாணவர்கள் அச்சமின்றி பரீட்சைக்கு செல்லலாம் - இராணுவ தளபதி

Published By: Vishnu

12 Oct, 2020 | 11:12 AM
image

(எம்.மனோசித்ரா)

தனிமைப்படுத்தல் ஊரங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் பிரத்தியேக பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதால் அந்த பிரதேசங்களிலிருந்து மாணவர்கள் அல்லது பொதுமக்கள் யாரும் வெளியிடங்களுக்குச் செல்வதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது என்று இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இன்று விஷேட அறிவித்தல் மூலம் இதனைத் தெரிவித்த அவர் அதில் மேலும் கூறியுள்ளதாவது :

சனிக்கிழமை இனங்காணப்பட்ட 105 தொற்றாளர்களில் மினுவாங்கொடை தொழிற்சாலை ஊழியர்கள் இருவர் உள்ளடங்குவதோடு ஏனையோர் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்களாவர். 

இந்நிலையில் தொற்றாளர்கள் முறையாக இனங் காணப்படுவதில்லை என்று வதந்திகள் பரப்பப்படுகின்றன.

தொழிற்சாலையுடன் நேரடி தொடர்பைக் கொண்ட அனைவரும் இனங்காணப்பட்டுள்ளதோடு ஏனையோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். புலமைப்பரிசில் பரீட்சைகள் நிறைவடைந்துள்ளதோடு உயர்தர பரீட்சைகள் நடைபெறவுள்ளன.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் பிரத்தியேக பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

மாணவர்கள் அச்சமின்றி பரீட்சை நிலையங்களுக்கு செல்ல முடியும். எனவே அந்த பிரதேசங்களிலிருந்து யாருக்கும் வெளியிடங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது.

தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும். அதற்கான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. அதே போன்று ஊரடங்கு சட்டத்தை தொடர்ந்தும் அமுல்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. காரணம் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளிலேயே தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தனியாருடன் இணைந்த சேவையை வழங்க முடியாது...

2024-04-16 10:14:41
news-image

இன்று பல அலுவலக ரயில் சேவைகள்...

2024-04-16 10:07:27
news-image

ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்

2024-04-16 09:52:55
news-image

பிணைமுறி பத்திர உரிமையாளர்கள் குழுவுடன் இறுதிக்கட்ட...

2024-04-16 09:31:45
news-image

தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில் மீண்டும் பேச்சு...

2024-04-15 16:25:40
news-image

இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின்...

2024-04-16 09:19:55
news-image

பரந்துபட்ட கூட்டணி குறித்து சிந்திக்கிறோம் :...

2024-04-15 16:12:00
news-image

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்...

2024-04-15 17:06:59
news-image

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் :...

2024-04-15 16:09:52
news-image

மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு!

2024-04-16 08:52:36
news-image

விக்னேஸ்வரனிடம் கால அவகாசம் கோரினார் வேலன்...

2024-04-15 16:06:32
news-image

வெள்ளியன்று தமிழரசின் மத்திய குழுக்கூட்டம் : ...

2024-04-15 15:58:07