கிளிநொச்சியில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

Published By: Digital Desk 4

11 Oct, 2020 | 07:18 PM
image

 கிளிநொச்சி மாவட்ட பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆழியவளை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு கஞ்சா போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆழியவளை பகுதியில் கஞ்சா விற்பனை இடம் பெறுவதாக பளை பொலிஸ் நிலையத்தின் புலனாய்வு பொலிசாருக்கு கிடைத்த தகவலுக்கமைய பளை நிலையத்தின் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர்  நேற்றைய தினம் (10.10.2020) மேற்கொள்ளப்பட்ட  விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 10.765 கிலோ கிராம் கேரள கஞ்சாவும்,14.500 ரூபா பணத்துடன் சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் பொலிசார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருவதாகவும் விசாரனைகளின் பின்னர் கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பளை பொலிசார் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்