2020 ஆம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசு அமெரிக்க கவிஞர் லூயிஸ் க்ளூக் கிற்கு இன்று வழங்கப்பட்டுள்ளது.
இலக்கிய நோபல் பரிசு பெற்ற லூயிஸ் க்ளூக் அமெரிக்க சமகால இலக்கியத்தில் மிக முக்கியமான கவிஞர்களில் ஒருவராக பாராட்டப்பட்டார்.
பிழையில்லா கவித்துவக் குரலும், அழகும் பொருந்திய கவிதைகளுக்காக லீயிஸ் க்ளக்கிற்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக நோபல் தேர்வுக் குழு தெரிவித்துள்ளது.
லூயிஸ் க்ளக் 1943 ஆம் ஆண்டில் நியூயோர்க்கில் பிறந்தவர். எழுத்துப் பணி போக யேல் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.
1968 ஆம் ஆண்டில் இவர் ஏழுதிய முதல் தொகுப்பான ஃபர்ஸ்ட்பார்ன் நல்ல வரவேற்பை பெற்று அமெரிக்க இலக்கியத் துறையில் லூயிஸிற்கு முக்கிய இடத்தை பெற்று தந்தது.
இவர் எழுதி 1992 ஆம் ஆண்டில் வெளியான வைல்ட் ஐரிஸ் தொகுப்பிற்கு வெகுவான வரவேற்பு கிடைத்தது. இதுபோக அவரது அவெர்னோ (2006), ஃபைத்ஃபுல் அண்ட் விர்ச்சுவஸ் நைட் (2014) ஆகிய தொகுப்புகளுக்கு நோபல் தேர்வுக் குழு புகழாரம் சூட்டியுள்ளது.
ஒக்டோபர் 9 இல் அமைதிக்கான நோபல் பரிசும், அக். 10 ஆம் திகதி பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படவுள்ளது.
அமைதிக்கான நோபல் பரிசு பரிந்துரையில் காலநிலை மாற்றத்திற்கு எதிராகப் போராடி வரும் கிரேட்டா துன்பர்க் பெயரும் பரிந்துரைப் பட்டியலில் இடம்பிடித்துள்ளமை குறுப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM