பள்ளிவாயல்களில் பேணப்பட வேண்டிய அவசர கொவிட்- 19 கட்டுப்பாடுகளை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் (வக்பு சபை) வெளியிட்டுள்ளது.
06.10.2020 திகதியிடப்பட்ட DGHS/COVID - 19/2020- 347 இலக்க சுகாதார அமைச்சின் சுற்றுநிருபம் மற்றும் கால வரையறைகளையொட்டி, இலங்கை வக்பு சபை பின்வருமாறு தீர்மானித்துள்ளது:
1) எந்தவொரு குறித்த நேரத்திலும் 100 நபர்களுக்கு மேல் தொழக்கூடிய பள்ளிவாயல்களில் 50 நபர்கள் என்ற உச்ச வரம்புக்கு உட்பட்டவாறு ஐவேளைத் தொழுகைகளையும் ஜும்மா தொழுகையையும் மாத்திரம் அனுமதித்தல்.
2).100 பேர்களை விட குறைந்த தொகையினர் தொழக்கூடிய பள்ளிவாயல்களில் அத்தொகையில் 50 சதவீதத்தை மாத்திரமே அனுமதித்தல்.
3). 50 பேர் அல்லது அதனை விடக் குறைந்த தொகையினரை எவ்வாறு தெரிவு செய்வது என்பதை ஜமாஅத்தாருக்கு முன்கூட்டியே அறிவித்தல்.
4). பள்ளிவாயலில் நுழையும் போது ஆட்களை அடையாளம் காணத் தேவையான விபரங்களைப் பதிவு செய்தல், கைகழுவுதல், எல்லா நேரங்களிலும் முகக்கவசம் (Mask) அணிதல், ஒரு மீட்டர் இடைவெளி பேணல், சொந்த முஸல்லாவில் தொழுதல் உட்பட ஏனைய அனைத்து சுகாதார, மற்றும் காவல் துறையினரது வரையறைகள் / கட்டுப்பாடுகள் மற்றும் வழிகாட்டல்கள் கண்டிப்பாக பேணப்படல்.
5). மறு அறிவித்தல் வரை மேற்குறித்த செயற்பாடுகள் தவிர்ந்த ஏனைய அனைத்து நடவடிக்கைகள் / ஒன்றுகூடல்கள் இடைநிறுத்தப்படல்.
6). மறு அறிவித்தல் வரை வரையறுக்கப்பட்ட பகுதிகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள பள்ளிவாயல்கள் தற்காலிகமாக மூடப்படல்.
மேலுள்ள 1, 2, 3, 4 ஆகிய வரையறைகளைப் பேணுவது சிரமம் அல்லது முடியாது எனக் கருதுகின்ற பள்ளிவாயல் நம்பிக்கையாளர்கள் / பொறுப்புதாரிகள் ஐவேளை தொழுகை மற்றும் ஜும்ஆ தொழுகை நடாத்துவதை தவிர்த்துக்கொள்ள முடியும்.
மேற்குறித்த பணிப்புரைகளை கண்டிப்பாக நிறைவேற்றத் தவறும் நம்பிக்கையாளர்கள் அல்லது பொறுப்புதாரிகளுக்கு எதிராக வக்பு சட்டம் மற்றும் தனிமைப்படுத்தல் சட்டம் ஆகியவற்றின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM