உயர்தர, புலமைப்பரிசில் பரீட்சைகள் தொடர்பில் பி.சி.ஆர். பரிசோதனையின் பின் இறுதி முடிவு

Published By: Digital Desk 3

06 Oct, 2020 | 04:46 PM
image

கம்பாஹா மாவட்டத்தில் புதிய கொரோனா கொத்தணி பரவலின் பி.சி.ஆர் சோதனைகளின் இறுதி முடிவுகளின் அடிப்படையில் க.பொ.த. உயர்தர மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகள் குறித்து கல்வி அமைச்சு இறுதி முடிவை எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்திருப்பதாவது, 

ஐந்தாம் தர புலமைபரிசில் பரீட்சை 11 ஆம் திகதி ஞாயிற்றுகிழமையும், க.பொ. உயர்தர பரீட்சை 12 ஆம் திகதி திங்கட்கிழமையும் ஆரம்பமாகும். பரீட்சை தொடர்பில் இதுவரை எந்த மாற்றமும் இல்லை.

இரண்டு பரீட்சைகளையும் திட்டமிட்டபடி நடத்த அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளன.

எவ்வாறாயினும், சமீபத்திய கொரோனா பரவல் ஏற்படுத்திய பாதிப்பைக் கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட  2000 பி.சி.ஆர் சோதனைகளின் முடிவுகளை அறிய அரசாங்கம் காத்திருக்கிறது என்று அமைச்சர் ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

இன்றும் நாளையும் வரவிருக்கும் கொரோனா பரிசோதனை  முடிவுகளின் அடிப்படையில் பரீட்சைகள் குறித்து கல்வி அமைச்சகம் இறுதி முடிவை எடுக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08