ரிஷாத்தின் சகோதரர் விடுதலை விவகாரமே குற்றப்புலனாய்வு பிரதானி இடமாற்றம் ? : கெஹெலிய

Published By: R. Kalaichelvan

06 Oct, 2020 | 03:47 PM
image

(நா.தனுஜா)

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் விடுதலை செய்யப்பட்டமையினாலேயே குற்றப்புலனாய்வுப் பிரிவின் பிரதானி பிரதிப்பொலிஸ்மாதிபர் நுவன் வெதசிங்க இடமாற்றம் செய்யப்பட்டிருக்கலாம் என்று அரசாங்கத்தின் ஊடகப்பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

அமைச்சரவையின் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று கொழும்பிலுள்ள அரசாங்கத்தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:

கேள்வி : குற்றப்புலனாய்வுப் பிரிவின் பிரதானி பிரதிப்பொலிஸ்மாதிபர் நுவன் வெதசிங்க இடமாற்றம் செய்யப்பட்டார். இவர் இடமாற்றம் செய்யப்பட்ட சம்பவம் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் விடுதலை செய்யப்பட்ட சம்பவத்துடனேயே நேரடியாகத் தொடர்புபடுகின்றது. எனவே உண்மையில் இந்த இடமாற்றத்திற்கான காரணம் என்ன? இதுவிடயத்தில் ஜனாதிபதியினால் ஏதேனும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதா?

பதில் : இது நிர்வாக ரீதியில் மேற்கொள்ளப்பட்டதொரு தீர்மானமாகும். நீங்கள் கூறுவதைப்போன்று ரிஷாட் பதியுதீனின் சகோதரர் விடுதலை செய்யப்பட்ட விவகாரத்துடன் தொடர்புடைய விதமாகவே இந்த இடமாற்றம் இடம்பெற்றிருக்கலாம் என்று கருதுகிறேன். ஏனென்றால் அண்மையில் அதுகுறித்தே அதிகளவில் பேசப்பட்டது. இது முற்றுமுழுதாக பொலிஸ் நிர்வாகம் மற்றும் சட்டம் ஆகியவற்றுடன் தொடர்புடைய பிரச்சினையாகும்.

கேள்வி : கடந்த அரசாங்கம் குற்றப்புலனாய்வுப்பிரிவின் அதிகாரிகளைப் பயன்படுத்தியே பல்வேறு நபர்கள் மீதும் வழக்குகளைத் தொடுத்தது என்று நீங்கள் குற்றஞ்சாட்டினீர்கள். அவ்வாறெனில் தற்போது இவ்விடயத்திலும் பாரிய சிக்கல் இருக்கிறதல்லவா? ரிஷாட்டின் சகோதரர் பல மாதகாலமாகக் குற்றப்புலனாய்வுப்பிரிவினரால் தடுத்துவைக்கப்பட்டு திடீரென்று விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார் அல்லவா?

பதில் : 'கடந்த காலத்தில் இடம்பெற்றதைப் போன்று எவரையேனும் தன்னிச்சையாகக் கைது செய்வதற்கோ அல்லது விடுதலை செய்வதற்கோ ஏற்றவகையிலான அதிகாரங்களை அரசியல்வாதிகளுக்கு வழங்குவதற்கு நான் தயாரில்லை. எனவே இதுவிடயத்தில் உரிய விசாரணைகளின் பின்னர் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்று ஜனாதிபதி ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறார். எனவே இதுவிடயத்தில் சட்டத்தின் பிரகாரம் உரியவாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படாமையினால் இந்த இடமாற்றம் இடம்பெற்றிருக்கக்கூடும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காலியில் உள்ள ஹோட்டலில் சாப்பிட வந்த...

2025-04-18 02:55:21
news-image

"சிறி தலதா வழிபாடு" இன்று முதல்...

2025-04-18 01:45:51
news-image

தபால்மூல வாக்களிப்பு : 20ஆம் திகதிக்கு...

2025-04-17 21:45:00
news-image

ஜி.எஸ்.பி. பிளஸை தக்கவைப்பது அவசியம் -...

2025-04-17 21:49:14
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் ; ஜனாதிபதி...

2025-04-17 21:46:34
news-image

இந்தியாவுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தை உடன் வெளிப்படுத்த...

2025-04-17 21:44:01
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியை...

2025-04-17 21:43:12
news-image

அஹுங்கல்லவில் துப்பாக்கிச் சூடு! ஒருவர் காயம்

2025-04-17 22:21:31
news-image

பிள்ளையானின் கைதால்  ரணில், கம்மன்பில கலக்கம்...

2025-04-17 21:46:12
news-image

குளத்தில் நீராடிய இளைஞன் நீரில் மூழ்கி...

2025-04-17 21:58:59
news-image

யாழில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க...

2025-04-17 21:14:06
news-image

சட்டவிரோத செயற்பாடுகளுடன் தொடர்புடைய வடக்கு தலைவர்கள்...

2025-04-17 21:02:04