இலங்கை மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கிடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தயாரித்து அமுல்ப்படுத்த ஆரம்பித்தவுடன் பொருளாதார, சமூக ரீதியாக பாரிய வெற்றிகளை இருநாடும் பெற்றுக்கொள்ளும் என சிங்கப்பூர் பிரதமர் லீ ஷியேன் லுங் தெரிவித்தார்.
மூன்று நாள் விஜயமொன்றை மேற்கொண்டு சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய போதே அந்நாட்டு பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது இஸ்தானா மாளிகையில் சிங்கப்பூர் பிரதமரினால் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டதுடன் இராணுவ அணிவகுப்பும் வழங்கப்பட்டது.
அங்கு சிங்கப்பூர் பிரதமர் லீ ஷியேன் லுங் மேலும் குறிப்பிடுகையில்,
நீண்ட காலமாக இரண்டு நாட்டுக்கும் இடையிலான மிகவும் வலுவான நட்புறவு காணப்படுகின்றது. கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட பிரிமா நிறுவனம் தற்போது இலங்கை நிறுவனம் என்ற அளவிற்கு மக்களுக்கு நெருக்கமாகியுள்ளது.
அத்துடன் தேசிய அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் சீரான கொள்கையின் காரணமாக சிங்கப்பூர் உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்கள் இலங்கையில் முதலீடு செய்வதற்கு தயாராக உள்ளது.
மேல் மாகாண மெகா பொலிஸ் திட்டம் மற்றும் திருகோணமலை அபிவிருத்தி திட்டங்கள் சிங்கப்பூர் சுபோனா ஜூரோங் நிறுவனத்தின் ஊடாக நடைமுறைப்படுத்தவுள்ளோம்.மேலும் சுற்றுலா அபிவிருத்தியின் போது சிங்கப்பூர் முதலீட்டாளர்களுடான தொடர்பை வலுப்படுத்த முனைவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதன்போது குறிப்பிட்டிருந்தார்.
இதேவேளை தென் ஆசியாவின் இஸ்லாமியர்களுக்கான விசேட மாநாடு ஒன்றினை நடத்துவதற்கு இலங்கை அரசாங்கம் தயாராகி வருகின்றது.இதன்படி குறித்த மாநாட்டிற்கு நாம் பூரண ஆதரவினை வழங்கவுள்ளோம் என சிங்கப்பூர் பிரதமர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM