பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் போட்டியில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் செபஸ்டியன் கோர்டாவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற ஸ்பெய்னின் ரபாயேல் நடால் கால்இறுதிக்கு முன்னேறினார்.
‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற சுற்று போட்டியொன்றில் ‘களிமண் தரையின் ஹீரோ’வான ரபாயேல் நடால் 6-1, 6-1, 6-2 என்ற நேர் செட்டில் செபஸ்டியன் கோர்டாவை விரட்டியடித்து பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் வரலாற்றில் 14 ஆவது தடவையாக கால்இறுதிக்கு முன்னேறினார்.
நடப்புச் சம்பியனான நடால் பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் தொடரில் பதிவு செய்த 97 ஆவது வெற்றியாக இது அமைந்தது.
மற்றொரு போட்டியில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜேர்மனி) 3-6, 3-6, 6-4, 3-6 என்ற செட் கணக்கில் ஜோனிக் சினெரிடம் (இத்தாலி) பணிந்தார்.
தரவரிசையில் 75 ஆவது இடத்திலுள்ள ஜோனிக் சினெர் கால்இறுதியில் நடாலுடன் மோதவுள்ளார்.