புங்குடுதீவு சிவன் ஆலய பூசகர் கொலை -  உதவியாளர் உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல்

Published By: Digital Desk 4

04 Oct, 2020 | 07:16 PM
image

புங்குடுதீவு ஊரதீவு பாணாவிடை சிவன் ஆலய சிவன் ஆலய பூசகர் கொலையுடன் சிவன் ஆலய பூசகர் கொலையுடன் கொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அவரது உதவியாளர் உள்ளிட்ட மூவரை வரும் ஒக்டோபர் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க ஊர்காவற்றுறை நீதிவான் நிதிமன்றம் உத்தரவிட்டது.

கிளிநொச்சியைச் சேர்ந்த இராசையா இராசரூப சர்மா (வயது-32) என்ற ஊரதீவு பாணாவிடை சிவன் கோவில் பூசகர் கொலை செய்யப்பட்ட நிலையில் நேற்று சனிக்கிழமை அதிகாலை சடலமாக மீட்கப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸாரும் யாழ்ப்பாணம் தடயவியல் பொலிஸாரும் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.

அதனை அடுத்து சம்பவ இடத்தில் ஊர்காவற்றுறை நீதிவான் அந்தோனிப்பிள்ளை ஜூட்சன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்ட மருத்துவ அதிகாரி மயூரன் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.

பூசகரின் பிடரியில் இரும்புக் கம்பியால் தாக்கியமையால் அவர் கொல்லப்பட்டார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பூசகரின் உதவியாளரான விஸ்வமடுவைச் சேர்ந்த விதுஷன் மற்றும் சுழிபுரம் பாணாவெட்டையைச் சேர்ந்த ஆலய உதவியாளர்கள் இருவரும் ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் பூசகரின் வீட்டிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட சிசிரிவி கமரா பதிவின் வன்தட்டு ( ஹார்ட் டிஸ்க்) உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டன.

சந்தேக நபர்கள் மூவரும் கொலைக் குற்றச்சாட்டின் கீழ் இன்று ஊர்காவற்றுறை நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர்.

இதன்போது சந்தேக நபர்கள் மூவரையும் விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தம்புள்ளையில் புதையல் தோண்டிய இளைஞன் கைது

2025-01-22 16:15:41
news-image

பேஸ்புக் கணக்கிற்குள் ஊடுருவி பண மோசடி...

2025-01-22 16:08:47
news-image

காலியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

2025-01-22 15:43:51
news-image

திருமண வயது எல்லையை பொது வயது...

2025-01-22 15:43:57
news-image

மட்டக்களப்பில் ஐஸ், கேரள கஞ்சா, கசிப்புடன்...

2025-01-22 15:31:29
news-image

சட்ட திட்டங்களினால் மாத்திரம் நாடொன்று முன்னோக்கிச்...

2025-01-22 15:31:13
news-image

ஹட்டனில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

2025-01-22 15:03:10
news-image

கிளிநொச்சியில் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்த வெள்ளம்;...

2025-01-22 15:09:36
news-image

சிங்கக் குட்டிகளுக்கு பெயரிட பொதுமக்களுக்கு அரிய...

2025-01-22 14:58:50
news-image

வாய்க்காலில் வீழ்ந்து கெப் வாகனம் விபத்து

2025-01-22 14:52:38
news-image

2014 முதல் நஷ்டத்தில் இயங்கிய ஶ்ரீலங்கன்...

2025-01-22 14:32:57
news-image

பொலன்னறுவையில் காட்டு யானை தாக்கி ஒருவர்...

2025-01-22 14:28:32