பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் எமது பந்து வீச்சாளர்கள், திட்டத்தை சரியாக செயற்படுத்தினார்கள் என, மும்பை இந்தியன்ஸ் அணித்தலைவரான ரோஹித் ஷர்மா பாராட்டு தெரிவித்துள்ளார்.
13-ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வருகிறது.
அபிதாபியில் நேற்று நடைபெற்ற 13 ஆவது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 48 ஓட்டங்களால் மும்பை இந்தியன்ஸ் அணி வென்றது.
வெற்றிக் குறித்து மும்பை இந்தியன்ஸ் அணித்தலைவரான ரோஹித் ஷர்மா கூறுகையில்,
“இது ஒரு சிறந்த வெற்றி. எங்கள் தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. பஞ்சாப் அணி பந்துவீச்சாளர்கள் தாக்குதல் தொடுப்பார்கள் என்பது எங்களுக்கு தெரியும். அதை எதிர்க்கொண்டு இறுதி வரை முன்னேற விரும்பினோம்.
ஹார்திக் பாண்டியா மற்றும் பொலார்ட் இறுதி கட்டத்தில் ஓட்டங்களை பெற்று கொடுத்தனர். இது போன்று நிறைய தடவைகள் செய்திருக்கிறார்கள்.
அவர்கள் இருவரும் நல்ல நிலையில் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஒட்டு மொத்தமாக துடுப்பாட்ட செயற்பாடு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
பந்து வீசுவது எளிதாக இருக்காது என்பது எங்களுக்கு தெரியும். ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை கைப்பற்ற வேண்டும் என்பதையும் நாங்கள் அறிந்திருந்தோம். அதையும் நாங்கள் செய்தோம்.
பந்து வீச்சாளர்கள் தங்களது திட்டங்களை சிறப்பாக செயற்படுத்தினார்கள். நான் 5000 ஓட்டங்கள் கடந்ததை நன்றாக உணர்கிறேன். ஆனால் அதை நான் அதிகமாக பார்க்கவில்லை. போட்டியில் வெல்வதுதான் முக்கியமானது” என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM