இருபதுக்கு 20 கிரிக்கெட் மேலும் முன்னேற்றமடைவதற்கு அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சு ஜாம்பவானான ஷேன் வோர்ன் மூன்று யோசனைகளை முன்வைத்துள்ளார்.
தற்போது ஐ.பி.எல். தொடரின் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் ஆலோசகராக செயற்பட்டுவரும் ஷேன் வோர்ன், இருபதுக்கு 20 கிரிக்கெட்டின் முன்னேற்றத்திற்கு மூன்று யோசனைகளை முன் வைத்துள்ளார். ‘ஒவ்வொரு மைதானத்திலும் பெளண்டரி தூரம் அதிகமாக இருக்க வேண்டும்.
சிறிய மைதானமாக இருந்தால் ஆடுகளத்தில் புற்கள் நிறைய இருக்க வேண்டும். இன்னிங்ஸ் ஒன்றில் ஒரு பந்துவீச்சாளர் அதிகபட்சமாக 4 ஓவர்களுக்கு பதிலாக 5 ஓவர்களாக மாற்ற வேண்டும்.
ஆடுகளம் முழுக்க முழுக்க துடுப்பாட்டத்துக்கு சாதகமாக இருக்கக்கூடாது. டெஸ்ட் கிரிக்கெட்டின் 4 ஆவது நாள் ஆடுகளம் (பிட்ச்) போல் இருக்க வேண்டும்.
சிக்ஸர்கள் மட்டும் தேவை என்று இல்லாமல் துடுப்பாட்டத்துக்கும், பந்துவீச்சுக்கும் இடையே சரிசமமான போட்டி நிலவ வேண்டும் என்று விரும்புகிறேன்’ என்று வோர்ன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM