பாதையை புனரமைத்து தருமாறு கோரும் மஸ்கெலியா பகுதி மக்கள்

Published By: Digital Desk 4

04 Oct, 2020 | 04:03 PM
image

மஸ்கெலியா பிரதேச சபைக்குட்பட்ட பிரவுன்லோ 49 குடியிருப்பு பகுதிக்கு செல்லும் பாதை புனரமைக்கப்படாமையால் அப்பகுதியில் உள்ள 35 குடும்பங்களை சேர்ந்த சுமார் 130 பேர் பெரும் இன்னல்களுக்கு மத்தியில் இப்பாதையை பயன்படுத்தி வருவதாக தெரிவித்தனர்.

அத்துடன் இப்பகுதியிலிருந்து பாடசாலை மாணவர்கள் மழை காலங்களில் சேற்றில் நடந்து செல்ல வேண்டியுள்ளதாகவும் இப்பாதையை பல அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் என அனைவரும் வந்து பார்வையிட்டு செல்கின்றனர்.ஆனால் இது வரை எவரும் பணிகளை ஆர்பித்ததாக தெரியவில்லை என்றும் குறிப்பிட்டனர்.

மேலும்,நாம் நகரத்திற்கு சென்று பொருட்களை கொள்வனவு செய்து திரும்பும் போது முச்சக்கரவண்டியை வாடகைக்கு எடுத்துச் செல்ல வேண்டுமேயானால் சுமார் ரூபாய் 500 அல்லது அதற்கு மேல் அறவிடுவதாகவும் ஆனால் அவ்வாறு வாடகை வழங்கினாலும் பலர் இப்பாதையில் வருவதற்கு விரும்புவதில்லை என்றும் இப்பகுதியில் வசித்து வரும் முதியோர் அல்லது யாரேனும் அவசரமாக சுகவீனமுற்றால் வைத்தியசாலை கொண்டு செல்ல பல இன்னல்களை சந்திக்க வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இவ்விடயம் தொடர்பாக அப்பகுதி பிரதேச சபை உறுப்பினரிடம் கேட்டபோது,இப்பாதை அபிவிருத்திக்காக எனது வேண்கோளுக்கு இணங்க முன்னாள் அமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான இராகிருஸ்ணணின் பன்முகப்படுத்தபட்ட நிதியிலிருந்து 20 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டபோதும் பணிகளை ஆரம்பிப்பதற்கு முன்னர் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தால் அந்நிதி பெற முடியாது சென்றதாகவும் தற்போது பிரதேச செயலகத்தின் ஊடாக மேற்கொள்ளும் வேலைத்திட்டங்களில் ஒன்றாக இப்பாதை புனரமைப்புபிற்காக வேண்டுகோள் ஒன்றை வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், அவ்வாறு பிரதேச செயலகத்தின் ஊடாக அபிவிருத்தி செய்யும் பட்சத்தில் இப்பாதை காபட் பாதையாக அமைவதுடன் பிரேமா, பழைய காணி பகுதி,49 குடியிருப்பு பகுதி மற்றும் 56 குடியிருப்பு பகுதிக்கு செல்லும் சுமார் ஆறு கிலோ மீற்றர் பாதை காபட் பாதையாக்கப்படும் என்றும் இப்பகுதி மக்களின் நலன் கருதி பேருந்து சேவையும் மேற்கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மிஹிந்தலை புனித பூமியில் சேவையாற்ற பாதுகாப்பு...

2023-12-10 12:35:03
news-image

பாராளுமன்ற அமர்வு ஒத்திவைப்பு 

2023-12-10 12:20:07
news-image

உலக ரீதியில் பலம் வாய்ந்த நாடுகளின்...

2023-12-10 12:14:23
news-image

கடன் செலுத்தும் காலத்தை நீடித்து வட்டியைக்...

2023-12-10 11:44:10
news-image

கொத்து கொத்தாக இலங்கையர்களின் உடலங்கள் இஸ்ரேலில்...

2023-12-10 11:16:12
news-image

நாடு முழுவதும் மின் துண்டிப்பு :...

2023-12-10 11:03:57
news-image

இலங்கைக்கு தேசிய விடுதலை இயக்கமே அவசியம்...

2023-12-10 11:08:10
news-image

செவ்வாயன்று இலங்கைக்கு மங்களகரமான செய்தி கிடைக்கும்...

2023-12-10 11:22:31
news-image

கொஸ்லந்தை - கெலிபனாவெல பகுதியில் மண்சரிவு...

2023-12-10 12:43:20
news-image

மஹாநாயக்க தேரரின் குற்றச்சாட்டு தொடர்பில் அரசாங்கம்...

2023-12-09 21:05:21
news-image

தமிழரசின் தலைமைக்கு மும்முனையில் போட்டி

2023-12-09 20:44:27
news-image

முக்கிய சந்திப்புக்களை நடத்தும் உலகத் தமிழர்...

2023-12-09 20:54:30