துப்பாக்கி ரவைகளுடன் நால்வர் கைது

Published By: Digital Desk 4

04 Oct, 2020 | 12:04 PM
image

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து நேற்று சனிக்கிழமை பிற்பகல் கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்தெமுல்ல பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில்  வெவ்வேறு வகையான துப்பாக்கி ரவைகளுடன் சந்தேக நபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேக நபர்களிடமிருந்து ரீ 56 ரக துப்பாக்கி ரவைகள் 255, 9 மில்லிமீற்றர் அளவிலான துப்பாக்கி ரவைகள் 4 மற்றும் மைக்ரோ ரக துப்பாக்கி ரவைகள் 3 ஆகியன கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கி ரவைகளை சூட்சுமமான முறையில் மறைத்து வைத்திருந்த சந்தேக நபர் மற்றும்  அவருக்கு உதவி புரிந்த மேலும் மூன்று சந்தேக நபர்கள் உள்ளிட்ட நால்வரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

முகத்துவாரம் மற்றும் இரத்மலானை பகுதிகளைச் சேர்ந்த 34, 38, 28 மற்றும் 44 வயதுடைய நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் கல்கிஸ்ஸ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

200 அடி பள்ளத்தில் விழுந்து கார்...

2025-02-12 15:40:01
news-image

வாழைச்சேனை - ஓமனியாமடுவில் கைக்குண்டு மீட்பு

2025-02-12 15:22:06
news-image

வளிமாசடைவால் கர்ப்பிணிகளின் கருவுக்கு ஆபத்து -...

2025-02-12 15:06:58
news-image

தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்து இளைஞன்...

2025-02-12 15:19:05
news-image

இனம், ஈழத்தின் சிக்கல்கள் சார்ந்து பேசிய...

2025-02-12 14:49:15
news-image

தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்த பொலிஸ்...

2025-02-12 14:48:47
news-image

யாழ். தையிட்டியில் தொடரும் இரண்டாம் நாள்...

2025-02-12 14:19:21
news-image

அடுத்த சில நாட்களுக்கு பகலில் வெப்பமும்,...

2025-02-12 14:21:46
news-image

வர்த்தகம், சந்தையை பன்முகப்படுத்தல் குறித்து ஜனாதிபதி...

2025-02-12 13:23:46
news-image

கார் - வேன் மோதி விபத்து...

2025-02-12 13:04:52
news-image

குரங்குகளுக்கு கருத்தடை செய்யும் திட்டம் தோல்வி

2025-02-12 14:22:43
news-image

உலக அரச உச்சி மாநாட்டில் இன்று...

2025-02-12 13:10:44