(செய்திப்பிரிவு)
உடுகம - நாக்கியாதெணிய பகுதியில் வியாழக்கிழமை பிற்பகல் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அதே பகுதியைச் சேர்ந்த 48 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கிரிஉல்ல பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய கிரிஉல்ல - போகஹயாய பகுதியில் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளில் 3 உள்நாட்டுத் துப்பாக்கிகளுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிரிஉல்ல மற்றும் நாரங்கொட பகுதிகளைச் சேர்ந்த 50 மற்றும் 53 வயது மதிக்கத்தக்கவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் யக்கலமுல்ல பொலிஸார் எலபட ஹேன பகுதியில் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் போர 12 வகை வெளிநாட்டுத் துப்பாக்கியுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். உடுவெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய கரடியனாறு - மாவடிஓடை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளில் 303 வகை துப்பாக்கியொன்று மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM