bestweb

மகாத்மா காந்தி, சாஸ்திரி பிறந்த நாள் - அஞ்சலி செலுத்திய இந்திய ஜனாதிபதி,பிரதமர்

Published By: Digital Desk 3

02 Oct, 2020 | 01:43 PM
image

இந்திய தேச பிதா  மகாத்மா காந்தி மற்றும் இந்திய முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி ஆகியோரின் பிறந்த நாளான இன்று இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் அஞ்சலி செலுத்தியுள்ளார்கள். 

மகாத்மா காந்தியின்  151 ஆவது பிறந்த தினமும், லால் பகதூர் சாஸ்திரியின்  116 ஆவது பிறந்த தினமும் இன்று கொண்டாடப்படுகிறது. 

இதையொட்டி டெல்லி  ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடம் மற்றும் விஜய் காட்டில் உள்ள சாஸ்திரி நினைவிடத்தில் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், இந்திய பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத், இந்திய மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், டெல்லி முல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளார்கள். 

காந்தியடிகள் மற்றும் சாஸ்திரியை நினைவுகூர்ந்து சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டுள்ளார்கள்.

இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் டுவிட்டர் பதிவுகளில்,

மகாத்மா காந்தி


‘வாய்மை, அகிம்சை மற்றும் அன்பு பற்றிய மகாத்மா காந்தியின் கொள்கை சமூகத்தில் நல்லிணக்கத்தை உண்டாக்குவதுடன, உலக நலனுக்கான பாதையை அமைக்கிறது. அவர் மனித குலத்திற்கு உத்வேகம் அளிக்கும் தலைவர்’ என புகழாரம் சூட்டி உள்ளார்.

லால் பகதூர் சாஸ்திரி 


முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி பிறந்த நாளை இன்று நாம் நினைவில் கொள்கிறோம். இந்தியாவின் ஒரு பெரிய மகன், அவர் நம் தேசத்திற்காக அர்ப்பணிப்புடன் சேவை செய்தார். பசுமைப் புரட்சி, வெள்ளை புரட்சி மற்றும் போர்க்கால தலைமை ஆகியவற்றில் அவரது அடிப்படை பங்கு தொடர்ந்து தேசத்தை ஊக்கப்படுத்துகிறது.

மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்திய பிரதமர் மோடியின் டுவிட்டர் பதிவுகளில்,

மகாத்மா காந்தி


காந்தியடிகள் வாழ்க்கை, உன்னத எண்ணங்களில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உள்ளது. வளமான, அன்பான இந்தியாவை உருவாக்குவதில் காந்தியின் கொள்கைகள் நமக்கு வழிகாட்டுகின்றன என்று புகழாரம் சூட்டி உள்ளார்.

லால் பகதூர் சாஸ்திரி 


லால் பகதூர் சாஸ்திரி ஜி தாழ்மையும் உறுதியும் கொண்டிருந்தார். அவர் எளிமையை சுருக்கமாகக் காட்டி, நமது தேசத்தின் நலனுக்காக வாழ்ந்தார். அவர் இந்தியாவுக்காக செய்த எல்லாவற்றிற்கும் ஆழ்ந்த நன்றியுடன் அவரது ஜெயந்தியில் அவரை நினைவில் கொள்கிறோம் என்று பதிவிட்டுள்ளார்.

இதேவேளை, சாஸ்திரி நினைவிடத்தில் அவரது மகன்கள் சுனில் சாஸ்திரி, அனில் சாஸ்திரி ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார்கள். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செவ்வாய் கிரகத்தின் மிகப்பெரிய பாறை 4.3...

2025-07-17 13:14:07
news-image

பெஞ்சமின் நெட்டன்யாகுவிற்கு எதிரான பிடியாணையை இரத்துசெய்யவேண்டும்...

2025-07-17 12:07:06
news-image

ஈராக்கில் தீவிபத்தில் 50க்கும் அதிகமானவர்கள் பலி

2025-07-17 11:51:39
news-image

காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளிற்கு பொறுப்புக்கூறலை உறுதி...

2025-07-17 11:34:18
news-image

தாயின் பாதையில் தனயன் - அங்கோலாவில்...

2025-07-17 10:58:55
news-image

பிரிட்டனின் இரகசிய ஆவணத்தில் உள்ள விபரங்கள்...

2025-07-17 10:40:13
news-image

நிமிஷா செய்த குற்றத்துக்கு மன்னிப்பு கிடையாது:...

2025-07-17 09:36:00
news-image

பெல்ஜியத்தில் டுமாரோலேண்ட் இசை விழாவின் பிரதான...

2025-07-17 09:08:12
news-image

சிரியாவின் இராணுவதலைமையகம் ஜனாதிபதி மாளிகையை சூழவுள்ள...

2025-07-16 20:22:03
news-image

பன்னாட்டு படையினருக்கு உதவிய ஆப்கான் பிரஜைகள்...

2025-07-16 16:15:46
news-image

காசாவின் உணவு விநியோக மையத்தில் குழப்பநிலை-...

2025-07-16 15:39:13
news-image

21 ஆண்டுகள் ஆகியும் ஆறாத ரணம்...

2025-07-16 12:42:39