அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவியான மெலினா ட்ரம்ப் ஆகியோருக்கு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்பின் உயர்மட்ட ஆலோசகரான ஹோப் ஹிக்ஸ் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
அதன் பின்னர் அவருடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்பும், அவரது மனைவியும் தனிமைப்படுதலுக்கு உட்படுத்தப்பட்டதுடன், கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொண்டு முடிவுக்காக காத்திருந்தனர்.
இந்நிலையில் அவர்களது பரிசோதனை முடிவுகளில் ட்ரம்ப் மற்றும் மெலினா ட்ரம்ப் இருவரும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து டெனால்ட் ட்ரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில்,
இன்றிரவு நானும் முதல் பெண்மணியும் கொவிட்-19 க்கு நேர்மறையான சோதனை செய்தோம். எங்கள் தனிமைப்படுத்தல் மற்றும் சிகிச்சைகளை உடனடியாக ஆரம்பிக்கவுள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM