300 மில்லியன் பெறுமதியான 300 மெட்ரிக் தொன் அரிசி விலங்கு உணவு உற்பத்திக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளது.
நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்த இரகசிய தவலுக்கிணங்க ஜா-எல, ஏக்கல பகுதியில் அமைந்துள்ள விலங்கு உணவு தயாரிப்பு தொழிற்சாலையொன்றுக்கு பந்துல குணவர்தன சகிதம் சென்ற நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகள் களஞ்சியசாலையில் பதுக்கி வைத்திருந்த ஒரு தொகை அரிசியை மீட்டுள்ளனர்.
விலங்கு உணவு உற்பத்தி தொழிற்சாலைகளில் இவ்வாறு தானியங்கள் பதுக்கி வைப்பதன் காரணமாக நுகர்வோர் மிகுந்த நெருக்கடிக்கு ஆளாகின்றனர்.
இதேவேளை உள்ளூர் உற்பத்தி அரசி மற்றும் உப உணவு பொருட்களை விலங்கு உணவு உற்பத்திக்கு பயன்படுத்தக் கூடாது என விசேட வர்த்தமானி அறிவித்தல் முன்னதாக வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் மேற்படி களஞ்சியசாலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த அரசி தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள நபர்கள் நீர்கொழும்பு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த மீட்பு நடவடிக்கையில் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன, நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் பணிப்பாளர், ஜா-எல பொலிஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் கம்பஹா மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு சபை அதிகாரிகள் என பலர் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM