ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் இன்றைய தினம் வடக்கு கிழக்கில் அழைப்பு விடுக்கப்பட்ட ஹர்த்தாலிற்கு வடமராட்சி, தென்மராட்சி மக்கள் பூரண ஆதரவினை வழங்கியுள்ளார்கள்.
அந்த வகையில், யாழ்.மாவட்டத்தின் சாவகச்சேரி, கொடிகாமம் பிரதேசம் முற்றாக முடங்கியதோடு பருத்தித்துறை மந்திகை, நெல்லியடி, நகரம் முற்றாக முடங்கியது. வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன, பாடசாலைகளுக்கு மாணவர்கள் செல்லவில்லை.
பொதுமக்கள் வீதிகளில் பயணிப்பது குறைவாகவே காணப்படுகிறது. அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த அனைத்து சேவைகளும் இன்றைய தினம் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.
10 தமிழ் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து தற்போதைய அரசினால் மேற்கொள்ளப்படும் தமிழ் மக்கள் மீதான அடாவடித்தனத்திற்கு ஜனநாயக ரீதியில் எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக இன்றைய தினம் வடக்கு கிழக்கில் பூரண கர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
நீதிமன்றங்களுக்கு சட்டத்தரணிகள் வருகைதராமையால் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.
பருத்தித்துறை யாழ்ப்பாண வழி தனியார் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம்பெறுகிறது. இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளும் சேவையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர் எனினும் பயணிகள் மிக மிக குறைந்தளவிலேயே காணப்படுகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM