பேசாலை விசேட புலனாய்வுத்துறைக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் பேரில் மன்னார் பிரதேசச் செயலகப் பிரிவில் உள்ள பெரிய கரிசல் பகுதியில் மகேந்திரா ரக வாகனம் ஒன்றில் ஒரு தொகுதி மஞ்சள் கட்டி மூடைகள் பதுக்கி வைக்கப்பட்ட நிலையில் நேற்று (26) சனிக்கிழமை மாலை பேசாலை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சுமார் 1024 கிலோ 200 கிராம் மஞ்சள் மூடைகள் இவ்வாறு பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த சம்பவத்தில் சந்தேக நபர்கள் யாரும் இல்லாத நிலையில் பெரிய கரிசல் பகுதியில் லொறி நிறுத்தப்பட்டுள்ள நிலையில் கைப்பற்றப்பட்ட மஞ்சள் மூடைகள் பேசாலை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்ட்டுவருகின்றது.
மஞ்சள் இந்தியாவில் இருந்து கடத்தல் மூலம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ள சம்பவங்கள் அண்மைக் காலமாக அதிகரித்துள்ளது.
மேலும் பேசாலை பொலிசாரினால் ஒரு மாதத்தில் 3 மஞ்சள் கடத்தல் சம்பவங்கள் பிடிக்கப்பட்டு உள்ளதாக பேசாலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
இதையடுத்து குறித்த கடத்தல் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பேசாலை பொலிஸார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM