விபத்தில் காவு கொள்ளப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு உயிர்கள்: அநுராதபுரத்தில் சம்பவம்

Published By: J.G.Stephan

27 Sep, 2020 | 03:11 PM
image

(செ.தேன்மொழி)
அநுராதபுரம் பகுதியில் முச்சக்கர வண்டியொன்று காருடன் மோதியதில் இடம்பெற்ற விபத்தில்  தந்தையும் மகளும் உயிரிழந்துள்ளதோடு, பெண்கள் இருவர் உட்பட மூவர் காயமடைந்து சிகிச்சைக்காக அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அநுராதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அநுராதபுரம் - தலாவ பிரதான வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.20 மணியளவிலே இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

இதன்போது அநுராதபுரம் பகுதியிலிருந்து தலாவை நோக்கி சென்ற முச்சக்கர வண்டி, குருநாகலில் இருந்து அநுராதபுரம் நோக்கி வந்த காருடன் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தின் போது முச்சக்கரவண்டியின் சாரதியான பெண் உட்பட நால்வர் பயணித்துள்ளதுடன் அவர்கள் நால்வருமே காயமடைந்துள்ளனர். இதன்போது கார் சாரதியும் காயமடைந்துள்ளதுடன் , அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பின்னர் முச்சக்கர வண்டியின் சாரதியான பெண்ணும் அதில் பயணித்த அவருடைய தந்தையும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தலாவ பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய தந்தையும் , 32 வயதுடைய அவருடைய மகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

விபத்தின் போது காயமடைந்து மூன்றுபேரும் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருவதுடன் , இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21