புதுடில்லி, இந்தியாவின் 'அயலகத்திற்கு முன்னுரிமை' என்ற அதன் கொள்கையின் கீழும் (Neighbourhood First Policy) பிராந்தியத்திலுள்ள சகலருக்கும் பாதுகாப்பும் வளர்ச்சியும் என்ற கோட்பாட்டின் கீழும் (Security and Growth for All in the Region) இலங்கைக்கு எப்போதுமே முன்னுரிமை கொடுத்து வந்திருக்கிறது என்று இன்று சனிக்கிழமை கூறியிருக்கும் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி, இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் ஆயிரக்கணக்கான வருடங்கள் பழைமையானது என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இன்றுகாலை இணையவழி மூலமாக உச்சிமாநாடொன்றை நடத்திய மோடி, இந்தக் கலந்துரையாடலுக்கான தனது அழைப்பை ஏற்றுக்கொண்டமைக்கு இலங்கைத் தலைவருக்கு நன்றி தெரிவித்தார். 'இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவுகள் ஆயிரக்கணக்கான வருடங்கள் பழைமை வாய்ந்தவை. எனது அரசாங்கத்தின் அயலகத்திற்கு முன்னுரிமை என்ற கொள்கை மற்றும் பிராந்தியத்திலுள்ள சகலருக்கும் பாதுகாப்பும் வளர்ச்சியும் என்ற கோட்பாட்டின் கீழும் இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகளுக்கு நாம் எப்போதும் விசேட முன்னுரிமை கொடுக்கிறோம்' என்று மோடி கூறினார்.
'இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான இந்த இணையவழி இருதரப்பு உச்சிமாநாட்டிற்கான எனது அழைப்பை ஏற்றுக்கொண்டமைக்கு உங்களுக்கு (மஹிந்த ராஜபக்ஷ) நன்றி. நீங்கள் மீண்டும் பிரதமராகத் தெரிவுசெய்யப்பட்டமைக்காகவும் உங்கள் கட்சி பாராளுமன்றத்தேர்தலில் பெற்ற பெருவெற்றிக்காகவும் வாழ்த்துக்களைக் கூறிக்கொள்கிறேன்' என்றும்
பிரதமர் மோடி தெரிவித்தார்.
இத்தகைய இணையவழி இருதரப்பு உச்சிமாநாட்டை அயல் நாடொன்றுடன் பிரதமர் மோடி நடத்துவது இதுவே முதற்தடவையாகும். 2020 ஆகஸ்ட் 9 ஆம் திகதி பிரதமராகப் பதவியேற்றுக்கொண்ட பிறகு வெளிநாட்டுத்தலைவர் ஒருவருடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நடத்துகின்ற முதலாவது இராஜதந்திர கலந்துரையாடல் இதுவாகும்.
இந்த இணையவழி உச்சிமாநாட்டிற்கு முன்னதாக கடந்த வருடம் நவம்பரில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவும் இவ்வருடம் பெப்ரவரியில் பிரதமர் மஹிந்தவும் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM