ஆர்பிகோ இன்சூரன்ஸ் நீரிழிவு நோயாளர்களுக்கென பிரத்தியேகமான Diabcare அறிமுகம் செய்துள்ளது

Published By: Jayanthy

26 Sep, 2020 | 03:20 PM
image

வாடிக்கையாளர்களுக்கு அவசியமான வேளைகளில் ஒப்பற்ற சேவைகளைப் பெற்றுக் கொடுக்க தன்னை அர்ப்பணித்துள்ள ஆர்பிகோ இன்சூரன்ஸ் பிஎல்சி, நீரிழிவு நோயாளர்களுக்காக பிரத்தியேகமாக அமைந்த Diabcare காப்புறுதித் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

இலங்கையில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் நீரிழிவினால் பாதிக்கப்பட்டுள்ளதாக, இலங்கை நீரிழிவு சம்மேளனத்தின் தேசிய நீரிழிவு நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. உலகளாவிய ரீதியில், சுமார் 463 மில்லியன் நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் குறைந்த மற்றும் மத்தியளவு வருமானமீட்டும் நாடுகளில் காணப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆறு நொடிகளுக்கும் தலா ஒரு நபர் வீதம் நீரிழிவால் உயிரிழப்பதாக தெரிவிக்கப்படுவதுடன், அமைதியான உயிர்கொல்லியாகவும் அறியப்படுகின்றது.

உலகில் காணப்படும் நான்கு பிரதான தொற்றா நோய்களில் ஒன்றாக நீரிழிவு காணப்படுகின்றது. கடந்த காலத்தில், நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுகாதாரக் காப்புறுதியொன்றைப் பெற்றுக் கொள்வது என்பது மிகவும் கடினமான காரியமாக அமைந்திருப்பினும், அண்மையில் மேற்கொள்ளப்பட்ட மீளாய்வுகளினூடாக காப்புறுதியைப் பெற்றுக் கொள்வது இலகுவாக்கப்பட்டுள்ளது. ஆர்பிகோ இன்சூரன்ஸ் பிஎல்சியின் தாய் நிறுவனமான, றிச்சர்ட் பீரிஸ் குழுமத் தவிசாளர் கலாநிதி. சேன யத்தெஹிகே அவர்களின் நோக்கமான, அனைத்து இலங்கையர்களுக்கும், அவர்களுக்கு தேவையான போது சேவைகளை வழங்குவது என்பதன் பிரகாரம், ஆர்பிகோ இன்சூரன்ஸ், தற்போது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த பிரத்தியேகமான காப்புறுதியை வழங்க முன்வந்துள்ளது.

ஆர்பிகோ இன்சூரன்ஸ் பிஎல்சியின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஹர்ஷ டி அல்விஸ் கருத்துத் தெரிவிக்கையில், “நீரிழிவு என்பது முறையாகப் பராமரிக்கப்படாவிட்டால், உண்மையில் ஆயுளைப் பாதிக்கும் ஒரு நோயாக அமைந்துள்ளது. இலங்கையில் இந்த நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமுள்ளது. முன்னணி காப்புறுதி சேவை வழங்குநர் எனும் வகையில், எமது மக்கள் மற்றும் சமூகத்தாருடன் இணைந்திருப்பது என்பதற்கமைய நாம் செயலாற்றுகின்றோம். நாம் இன்றைய காலகட்டத்தில் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் கவனம் செலுத்துகின்றோம்.” என்றார்.

“Diabcare என்பது வாடிக்கையாளர்களுக்கு நிதிப் பாதுகாப்பை வழங்குவதுடன், இந்த நோயை கட்டுப்படுத்திக் கொள்வதற்கு அவசியமான உதவிகளை வழங்குவதாகவும் அமைந்துள்ளது.” என அவர் மேலும் குறிப்பிட்டார். காப்புறுதிதாரர் உயிரிழந்தால் அல்லது அவருக்கு புற்றுநோய், பக்கவாதம், குருட்டு நிலைஃமுழுமையான பார்வை இழப்பு, இறுதிக் கட்டத்திலுள்ள சிறுநீரக செயலிழப்பு (ESRF) மற்றும் உடல் உறுப்பு ஒன்றை நீக்க வேண்டிய நிலை போன்ற ஏதேனும் பாரதூரமான நிலைகளின் போது காப்பீடு செய்யப்பட்ட தொகை செலுத்தப்படும்.

மேலும், காப்புறுதித் திட்டம் மூன்று வருட காலப்பகுதியை பூர்த்தி செய்ததும், காப்புறுதிதாரருக்கு வைத்தியரினால் பரிந்துரைக்கப்படும் நீரிழிவு தொடர்பான பரிசோதனைகளுக்குரிய மருத்துவ செலவுகளை வருடமொன்றுக்கு ரூ. 5000 வரை காப்புறுதி நிறைவடையும் வரை ஈடு செய்து கொள்ள முடியும். 

2004 ஆம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின் போது இலங்கையின் காப்புறுதித் துறை என்பது தொடர்ச்சியாக வாடிக்கையாளர்கள் தொடர்பில் கவனம் செலுத்தியிருந்தது. கொரோனா வைரஸ் தொற்று பரவிய போது ஆர்பிகோ இன்சூரன்ஸ் முதன் முதலில் முன்வந்து சகல காப்புறுதிதாரர்களின் மருத்துவ மற்றும் ஆயுள் இழப்பீடுகளை முதன் முதலில் ஈடு செய்த காப்புறுதி நிறுவனங்களில் ஒன்றாகும்.

வாடிக்கையாளர்களுக்கு ஒப்பற்ற பராமரிப்பு, ஈடுபாடு மற்றும் மதிப்புடன் சேவைகளை பெற்றுக் கொடுக்க தன்னை அர்ப்பணித்துள்ள ஆர்பிகோ இன்சூரன்ஸ், புத்தாக்கமான காப்புறுதி சேவைகளை வழங்கும் நிறுவனம் மற்றும் உலகத் தரம் வாய்ந்த காப்புறுதித் தீர்வுகளை வழங்கும் நிறுவனம் எனும் நன்மதிப்பைக் கட்டியெழுப்பியுள்ளது. நிறுவனம் தொடர்ச்சியாக தனது பெறுமதிகளை முன்னிறுத்தி, துறையை மேலும் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வதற்கான பங்களிப்பை வழங்குகின்றது. உயிர் வாழ்வோருக்கான காப்புறுதியை பெற்றுக் கொடுப்பதில் தன்னை அர்ப்பணித்துள்ள ஒரே ஆயுள் காப்புறுதி நிறுவனமாக ஆர்பிகோ இன்சூரன்ஸ் கம்பனி திகழ்கின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

Yamaha மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்களுக்காக பிரத்தியேகமாக...

2024-03-28 10:39:07
news-image

Samsung Sri Lanka ஆனது 35%...

2024-03-27 10:43:06
news-image

பருக்களுக்கு விடைகொடுத்திடும் : பியுரிஃபைங் நீம்...

2024-03-27 10:19:07
news-image

கார்கில்ஸ் நிறுவனமானது பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு எதிரான...

2024-03-27 10:17:41
news-image

SampathCards உடன் இணைந்து  0% வட்டி...

2024-03-20 02:18:01
news-image

பெண்களுக்கு அதிகாரமளித்தல், சமூகங்கள் மத்தியில் மாற்றத்தை...

2024-03-20 02:13:22
news-image

2023ம் ஆண்டின் நாலாம் காலாண்டில் குறிப்பிடத்தக்க...

2024-03-20 02:05:24
news-image

Francophonie 2024 – மார்க் அய்மன்...

2024-03-18 15:26:06
news-image

சியபத பினான்ஸ் பிஎல்சீ, பதுளை ஸ்ரீ...

2024-03-18 14:49:36
news-image

9 ஆவது வருடமாக கொழும்பு பங்குசந்தை...

2024-03-14 21:40:35
news-image

கொரியன் எயார்லைன்ஸுடன் கைகோர்க்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

2024-03-14 21:46:34
news-image

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடிய மக்கள்...

2024-03-12 11:20:57