ரஷ்யப் பிரஜையின் இறுதி பி.சி.ஆர். சோதனை முடிவு வெளியீடு

Published By: Vishnu

25 Sep, 2020 | 06:14 PM
image

(எம்.மனோசித்ரா)

மாத்தறையில் அமைந்துள்ள ஹோட்டலொன்றில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த போது கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியுள்ளதாக இனங்காணப்பட்ட ரஷ்ய பிரஜைக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவின் விஷேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

குறித்த நபருக்கு விமான நிலையத்தில் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையின் போது தொற்று ஏற்பட்டுள்ளமை இனங்காணப்படவில்லை. 

அதன் பின்னர் தனிமைப்படுத்தப்பட்டிருந்த போது பரிசோதனை மேற்கொண்ட போதே தொற்றுக்குள்ளாகியுள்ளமை 23 ஆம் திகதி புதன்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

அதனையடுத்து இரு தினங்களுக்கு பின்னர் இன்று வெள்ளிக்கிழமை இறுதியாக மேற்கொண்ட பரிசோதனையின் போது தொற்று இல்லை என்ற பெறுபேறு கிடைக்கப் பெற்றுள்ளது. 

எனினும் இந்த பெறுபேற்றைக் கொண்டு அவருக்கு வைரஸ் தொற்று ஏற்படவில்லை என்று கூற முடியாது. தொடர்ந்தும் சிகிச்சையளிப்பதோடு தனிமைப்படுத்தி கண்காணிக்க வேண்டியது அவசியமாகும்.

இவர் கடந்த 13 ஆம் திகதி ரஷ்யாவுக்கு சொந்தமான விமானமொன்றில் நாட்டுக்கு வந்துள்ளார் என்பதோடு இவருடன் மேலும் 15 பேர் குறித்த விமானத்தில் வருகை தந்துள்ளனர். 

குறித்த நபரோரு நேரடியாக தொடர்பு கொண்டவர்களும் , அவர்களுடன் தொடர்பு கொண்டவர்களும் சுமார் 150 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-03-25 11:59:59
news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் 02...

2025-03-25 11:56:24
news-image

தேசபந்து தென்னக்கோனுக்கு 3 வேளையும் வீட்டிலிருந்து...

2025-03-25 11:29:23
news-image

யாழில் சிறுமியை மின் கம்பத்தில் கட்டி...

2025-03-25 11:23:33
news-image

யோஷித ராஜபக்ஷவும் அவரது மனைவியும் பொலிஸ்...

2025-03-25 11:14:33
news-image

யாழில் ஏ.ரி.எம். அட்டையைத் திருடி மதுபானம்...

2025-03-25 11:12:02
news-image

வேட்புமனு தாக்கலின் பின் தேர்தல் விதிமுறை...

2025-03-25 11:05:49
news-image

பிரிவினைவாத புலம்பெயர்ந்தோர் முன்னர் எப்போதும் இல்லாத...

2025-03-25 11:06:05
news-image

கிளிநொச்சியில் சூட்சுமமான முறையில் இயங்கிய கசிப்பு...

2025-03-25 11:53:00
news-image

மீட்டியாகொடையில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு!

2025-03-25 10:48:17
news-image

நாட்டில் சில பகுதிகளில் எட்டரை மணிநேரம்...

2025-03-25 10:42:16
news-image

'மனித உரிமை மீறல் குற்றவாளிகளை சர்வதேசநீதிமன்றத்திற்கு...

2025-03-25 10:47:57