புலி இறைச்சியை விற்ற தம்பதியினர் கைது!

Published By: R. Kalaichelvan

25 Sep, 2020 | 02:51 PM
image

(செ.தேன்மொழி)

கண்டி - உடுதும்பர பகுதியில் சட்டவிரோதமான முறையில் புலி இறைச்சியை விற்பனை செய்ததாக தம்பதியினர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உடுதும்பர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலல்கமுவ பகுதியில் இன்று பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக உடுதும்பர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

பன்றிகளை வேட்டையிடும் நோக்கத்தில் தயாரித்து வைக்கப்பட்டிருந்த பொறியில் சிக்கி உயிரிழந்திருந்த புலியை இவ்வாறு இறைச்சிக்காக விற்பனை செய்துள்ளனர்.

உடுதும்பர பகுதியைச் சேர்ந்த 32 - 34 ஆகிய வயதுக்கு இடைப்பட்ட மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர்களிடமிருந்து 14 கிலோ கிராம் புலி இறைச்சியும் , புலியின் தலை உள்ளிட்ட ஏனைய உடற்பாகங்களும் மீட்கப்பட்டுள்ளன.

சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை உடுதும்பர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காலனித்துவ ஆட்சி காலத்தில் இழைக்கப்பட்ட அநீதிகளிற்கு...

2025-03-27 07:43:23
news-image

இன்றைய வானிலை

2025-03-27 06:37:01
news-image

முல்லைத்தீவில் 239 கசிப்பு விற்பனையாளர்கள் :...

2025-03-27 07:33:00
news-image

விபத்தில் சிக்கிய குடும்பப்பெண் யாழ். போதனா...

2025-03-27 01:36:52
news-image

மொரட்டுவையில் ரயில்வே மேம்பாலம் இடிந்து விழுந்தது

2025-03-27 07:30:32
news-image

யாழ்.அனலைதீவில் கால்நடை வைத்திய நடமாடும் சேவை

2025-03-26 23:54:53
news-image

பொருட்களின் விலைகளையும் சேவை கட்டணத்தையும் குறைக்க...

2025-03-26 19:29:31
news-image

வேட்பு மனுக்கள் நிராகரிப்புக்கு எதிராக உயர்...

2025-03-26 19:28:47
news-image

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் செக்...

2025-03-26 19:28:01
news-image

மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர்...

2025-03-26 19:46:04
news-image

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நபர் மட்டு. மாமாங்கம்...

2025-03-26 18:05:14
news-image

இழுவை மீன்பிடியை படிப்படியாக நிறுத்தலாம் ;...

2025-03-26 17:29:34