கடல் எல்லையைத் தாண்டி வடகொரிய கடற்பரப்பிற்குள் நுழைந்த தென் கொரிய அரசு ஊழியர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக சியோல் இராணுவ அதிகாரி வியாழக்கிழமை தெரிவித்தார்.
இது தொடர்பில் தென் கொரியாவின் கூட்டுத் தலைவர்களுடன் ஒரு உயர் அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் அஹ்ன் யங்-ஹோ கூறுகையில்,
கடல் விவகாரங்கள் மற்றும் மீன்வளத்துறை அமைச்சகத்தின் ஒரு அதிகாரி செப்டம்பர் 21 அன்று யியோன்பியோங் தீவுகளுக்கு தெற்கே 1.9 கிலோமீட்டர் (1.2 மைல்) கடற்பரப்பில் காணாமல் போனார்.
இது தெ்கொரியாவின் வடக்கிற்கும் இடையேயான கடல் எல்லையாக செயல்படும் இராணுவ கட்டுப்பாட்டின் சர்ச்சைக்குரிய எல்லையாகும்.
47 வயதானவர் எவ்வாறு காணாமல்போனார் என்பது ஆரம்பத்தில் தெளிவாக கண்டறியப்படவில்லை. ரோந்து கப்பலில் அவரது காலணிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக முந்தைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந் நிலையில் தென்கொரியா இராணுவம் வட கொரிய படையினரால் அவர் சுட்டுக்கொல்லப்பட்டார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
வட கொரிய இராணுவம் அவரை சுட்டுக் கொன்றதற்கான சரியான காரணம் தெளிவாகத் தெரியவில்லை, எனினும் அவர்கள் கொரோனா வைரஸ் எதிர்ப்பு உத்தரவின் கீழ் செயல்பட்டிருக்கலாம் என்று யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்க வட கொரிய இராணுவத்தினருக்கு "சுட்டுக் கொல்லும் உத்தரவு" வழங்கப்பட்டதாக தென் கொரியாவில் உள்ள அமெரிக்க இராணுவத் தளபதி இம் மாத தொடக்கத்தில் கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM