பெண்களின் கர்ப்பப்பையில் ஏற்படக்கூடிய பைபுரோயிட் கட்டிகளும், சூலகத்தில் ஏற்படக்கூடிய ஓவரியன் சிஸ்ட் (Ovarian Cyst) சூலகக் கட்டிகளும் இன்று பலரும் அறிந்த கூடுதலாக பெண்களுக்கு ஏற்படக்கூடிய பொதுவான பிரச்சினையாகவுள்ளது.
தற்போது பெண்கள் பருவமடைந்த வயதிலிருந்து மாதவிடாய் நின்றுபோகக்கூடிய மெனோபோஸ் பருவ வயதுவரை இவ்வாறான கட்டிகளை கண்டறியும் காலமாக உள்ளது.
இவ்வாறான கட்டிகள் கண்டறியப்பட்டதும் அது தொடர்பாக சம்பந்தப்பட்ட பெண்ணிற்கும், அவருடன் தொடர்புடைய குடும்பத்தவர்களுக்கும் பல்வேறு கேள்விகளும், சந்தேகங்களும் எழுவது வழமை. இவ்வாறான கட்டிகள் ஏன் ஏற்பட்டன என்பதும், அவற்றை என்ன வழியில் குணப்படுத்தலாம் என்பது அவற்றினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் எவை என்பனவும் சந்தேகங்களாகும்.
இவ்வாறான சந்தேகங்களுக்கு தகுந்த விளக்கமளித்து தீர்த்து வைப்பது எமது கடமையாகும்.
கர்ப்பப்பையில்/ சூலகத்தில் கட்டிகள் தோன்றுவதற்கான காரணங்கள்
கர்ப்பப்பையிலோ சூலகத்திலோ தோன்றும் கட்டிகள் ஏன் ஏற்பட்டன? எனக் கேட்டால் சரியான விடைகாண முடியாது. ஏனெனில் இவ்வாறான கட்டிகள் பெண்களின் தனிப்பட்ட பரம்பரை இயல்புகள் காரணமாகவே தோன்றுகின்றன. இவை உட்கொள்ளும் உணவு வகைகளாலோ அல்லது மருந்து வகைகளாலோ ஏற்படுவதில்லை. ஆனால் பைபுரோயிட் கட்டிகள் கூடுதலாக மணம் முடிக்கத் தாமதமாகும் 40 வயதிற்கு மேற்பட்ட பெண்களிலும், மணம் முடித்தும் குழந்தைப் பாக்கியம் தாமதடையும் பெண்களிலும் 40 வயதிற்கு மேல் தோன்றுகின்றது.
இதிலிருந்து பார்க்கும்போது தொடர்ச்சியான ஹோர்மோன்களின் தூண்டுதலும் இவை ஏற்படக் காரணமாகும். எப்படியாயினும் பைபுரோயிட் கட்டிகளோ, சூலகக் கட்டிகளோ ஏற்படுவதை பெண்களாலோ, மருத்துவர்களாலோ தடுக்க முடியாது. ஆனால் ஒழுங்கான ஆரம்ப பரிசோதனை மூலம் அவற்றை ஆரம்பத்தில் கண்டறிவது சரியான சிசிச்சைகள் எடுப்பதே சிறந்த வழியாகும்.
கர்ப்பப்பை மற்றும் சூலகக் கட்டிகளை கண்டறியும் பரிசோதனைகள்
பெண்களில் ஒழுங்கற்ற மாதவிடாய்போக்கு, மாதவிடாயின் போது அடிவயிற்றுவலி, மாதவிடாய் காலத்தில் அதிகளவான குருதிப்போக்கு, திருமணமான பெண்களில் நீண்டகாலம் குழந்தைப்பாக்கியம் தாமதமடைதல் போன்ற ஏதாவது காரணங்களுக்கு வயிற்றை அமர்த்திப்பார்த்து கட்டித்தன்மையையும் வைத்து ஓரளவு எம்மால் கட்டிகள் இருக்கலாம் என சந்தேகித்தால் ஸ்கான் பரிசோதனை ஒன்றின் மூலம் இதனை உறுதிப்படுத்தலாம். ஸ்கான் பரிசோதனையில் பலவகைகள் உண்டு. அவற்றில் U.S ஸ்கான் (Ultra Sound Scan) CT ஸ்கான், MRF ஸ்கான் போன்றவற்றின் மூலம் இவ்வாற கட்டிகளை கண்டறிய முடியும். இதில் மிகவும் எளிமையானதும் இலாபகரமானதுமான ஸ்கான் U.S ஸ்கான் ஆகும். எனினும் சில சந்தர்ப்பங்களில் CTஸ்கான், MRI ஸ்கான் உதவிகள் தேவைப்படும்.
ஸ்கான் பரிசோதனை மூலம் கட்டியை உறுதிப்படுத்திய பின்னர் அவை எந்தளவு ஆபத்தானவை என்பதை அறிய இரத்தப்பரிசோதனைகள் சில செய்யவேண்டும். இதனை CA–125 என்ற இரத்தப்பரிசோதனை பெறுபேறுகளை வைத்து கட்டியின் வகையையும் அதன் தீவிர தன்மையையும் அறிந்துகொள்ள முடியும்.
கர்ப்பப்பை கட்டிகள் கண்டறியப்பட்டால் மேற்கொள்ள வேண்டிய சிகிச்சைகள்
கர்ப்பப்பையிலோ சூலகத்திலோ கட்டிகள் இருப்பது அறிந்தும் பெண்கள் மனதில் தோன்றும் முதல் கேள்வி இதனைக் கரைக்க மருந்துகள் உண்டா? என்பது ஆகும். பைபுரோயிட் கட்டிகளை மருந்துகள் மூலம் கரைக்க முடியும்.
எனினும் Garh என்ற ஊசிமூலம் இக்கட்டிகள் தற்காலிகமாக சுருங்க வைக்கப்பட்டாலும் சிறிது காலத்தின் பின் மீண்டும் பழைய பருமனுக்கும் வளர்க்கக்கூடும். ஆகையால் ஊசிமூலம் கட்டிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் பெரிய அளவில் வெற்றியளிக்கும் எனக் கூறமுடியாது. அதுபோலவே சூலகக்கட்டிகளுக்கும் ஊசி மூலமான சிகிச்சைகள் வெற்றியளிப்பது குறைவு.
கர்ப்பப்பை கட்டிகளுக்கு சத்திரசிகிச்சை அவசியம் தானா?
கர்ப்பப்பைக் கட்டிகளுக்கோ, சூலகக்கட்டிகளுக்கோ அவற்றை கண்டறிந்ததும் அடுத்தது சத்திரசிகிச்சைதான் என நினைக்க வேண்டாம்.
கட்டிகள் உள்ள எல்லோருக்கும் சத்திரசிகிச்சைதான் கட்டாயம் செய்ய வேண்டுமென்பதில்லை. அதாவது கட்டிகளின் பருமன், அதன் நோய் அறிகுறிகளின் தீவிரம் மற்றும் இரத்தப் பரிசோதனையின் பெறுபேறுகளின் அளவுகள், குழந்தைப்பாக்கியத்தின் தேவைகள், பெண்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் என பல விடயங்களை கருத்திற்கொண்டு சத்திரசிகிச்சை ஒன்று தீர்மானிக்கப்படுகின்றது. அதாவது உடனே சத்திரசிகிச்சை செய்வது அவசியமா? அல்லது சிறிது காலம் பொறுத்திருந்து பார்க்கலாமா? என முடிவு செய்யலாம்.
குழந்தைப்பாக்கியம் தாமதமடையும் ஒரு பெண்ணில் இவ்வாறான கர்ப்பப்பை கட்டிகள் கண்டறியப்பட்டால், அவை சிகிச்சைக்கு உட்படுத்தப்படவேண்டிய கட்டிகளா என முதலில் அறியவேண்டும். ஏனெனில் சில கட்டிகளுக்கு சிகிச்சைகள்அவசியமில்லை. இந்த கட்டிகளை மருத்துகள் மூலம் குணமாக்க முடியாது. சத்திரசிகிச்சைகள் மூலமே அகற்றவேண்டும். அவ்வாறு பைபுரோயிட் கட்டிகள் உள்ளபோது சத்திரசிகிச்சை அவசியமா என கட்டியின் பருமன், அது கர்ப்பப்பையினுள் அமைந்துள்ள இடம், என்பவற்றை வைத்தே சத்திரசிகிச்சை தீர்மானிக்கப்படும்.
அவசியமற்ற கட்டிகளுக்கு சத்திரசிசிச்சை மேற்கொண்டால் அதனால் தீமையே ஏற்படும். எனவே குழந்தைப்பாக்கியம் தாமதடையும் பெண்களில் பைபுரொயிட் கட்டிகளுக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளும்போது அது அவசியமானதுதான் என்றாலே மேற்கொள்ள வேண்டும்.
எனவே கர்ப்பப்பை, சூலகக் கட்டிகள் தற்போது ஒரு சகஜமான விடயமாகவே உள்ளது. இவற்றுக்கு சத்திரசிகிச்சை தான் அவசியம் என்றில்லை. இக்கட்டிகள் புற்றுநோய் தொடர்புள்ளவை என்றுமில்லை.
பல காரணிகளை கலந்தாலோசித்து விருப்பு வெறுப்பிற்கு ஏற்றவாறு உங்களது மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சைகளை தீர்மானிப்பதே சிறந்த வழி.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM