ஹோமாகம, கல்கிஸ்ஸ பகுதிகளில் நேற்று புதன்கிழமை மாலை பொலிஸார் முன்னெடுத்த சுற்றிவளைப்புகளில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் உள்ளிட்ட சுந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஹோமாகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹிரிப்பிட்டிய வீதியில் பொலிஸார் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் ஹெரோயினுடன் பெண் உள்ளிட்ட சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வீதியில் சென்ற சந்தேகத்திற்கிடமான முச்சக்கர வண்டியொன்றை நிறுத்தி சோதனைக்கு உட்படுத்தியபோது 23 கிராம் 103 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டதுடன் பெண்ணொருவர் உள்ளிட்ட சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.பன்னிப்பிட்டிய மற்றும் நுகேகொட பகுதிகளைச் சேர்ந்த 46, 34 வயதான நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கல்கிஸ்ஸ பொலிஸார் முன்னெடுத்த சோதனை நடவடிக்கைகளில் இரத்மலானை பகுதியில் வைத்து 2 கிராம் 200 மில்லிகிராம் ஹெNரொயின் போதைப்பொருளுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தர்மாராம வீதி - இரத்மலானை பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயது மதிக்கத்தக்க நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM