பச்சிலைப்பள்ளி பிரதேசத்திற்குட்பட்ட முகமாலைப் பகுதியில் நேற்றுடன் எலும்புக்கூடுகள் மீட்பு நடைப்பெற்று நிறைவடைந்துள்ளது.
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்துக்குட்பட்ட முகமாலை பகுதியில் கடந்த 17ஆம் திகதி கண்ணிவெடி அகற்றும் பணி பிரிவினரால் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு கொண்டிருக்கும் பொழுது சீருடைகளுடனான மனித எச்சங்கள் இனங்காணப்பட்டு பளை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து கிளிநொச்சி மாவட்ட நீதிபதி த. சரவணராஜா முன்னிலையில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது நேற்றும் நேற்று முன்தினமும் அகழ்வு பணி இடம்பெற்றிருந்த நிலையில் அகழ்வின்போது விடுதலைப் புலிகளின் சீருடைகள் மற்றும் மனித எச்சங்கள், மண்டையோடுகள் எலும்புகள் போன்றன மீட்கப்பட்டதுடன் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் புகைப்படம் மற்றும் விடுதலைப் புலிகளின் போராளிகள் அணிந்திருக்கும் சயனைட் குப்பி மற்றும் இலக்கத் தகடுகள் இரண்டு என்பன மீட்கப்பட்டதுடன் குறித்த அகழ்வு தொடர்பான இரண்டாம் கட்ட அகழ்வு நேற்று ,3.00 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டடுஅகழ்வு பணி 5 மணியளவில் நிறைவடைந்தது.
இந்த அகழ்வுப் பணி இராணுவத்தினர்,பொலிசார் முன்னிலையிலும் இடம்பெற்றது. இந்த அகழ்வின் போது தகடு 01 மண்டையோடு 02, பல்வரிகள், விடுதலைப்புலிகளின் வரி சீருடைகள், சீப்பு, பற்றி ,மகசின் 02 என்பன மீட்கப்பட்டன. இதையடுத்து நேற்றுடன் இந்த அகழ்வு பணி நிறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM