கஞ்சா விற்பனை செய்த முன்னாள் இராணு வீரர் கைது!

Published By: R. Kalaichelvan

23 Sep, 2020 | 03:10 PM
image

பேருவல, மத்துகம மற்றும் களுத்துறை உள்ளிட்ட பகுதிகளிலுள்ள பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து கேரள கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட முன்னாள் இராணுவ வீரர் குற்றப்புலனாய்வு அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து 200 கிராம் கேரள கஞ்சா போதைப்பொருள் மற்றும் கஞ்சா சுருட்டு தயாரிப்பதற்கான சிகரெட் 35 ஆகியன கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குடலிகம பகுதியில் வசிக்கும் 31 வயதான குறித்த முன்னாள் இராணுவ வீரர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் நீண்ட காலமாக களுத்துறை மாவட்டத்தின் பல பாடசாலைகள் மற்றும் மாலைநேர வகுப்புக்களுக்கு செல்லும் மாணவர்களை இலக்கு வைத்து கேரள கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

பல சந்தர்ப்பங்களில் மாலைநேர வகுப்புக்களில் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கும் நபர்களுடன் இணைந்து சந்தேக நபரும் துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் 10 மாணவர்கள் அடங்கிய குழுவிற்கு கஞ்சா பக்கட் ஒன்று 3000 ரூபாவிற்கு விற்பனை செய்துள்ளதாகவும் அவரிடம் கஞ்சா கொள்வனவு செய்த வேறு நபர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08