பேருவல, மத்துகம மற்றும் களுத்துறை உள்ளிட்ட பகுதிகளிலுள்ள பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து கேரள கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட முன்னாள் இராணுவ வீரர் குற்றப்புலனாய்வு அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து 200 கிராம் கேரள கஞ்சா போதைப்பொருள் மற்றும் கஞ்சா சுருட்டு தயாரிப்பதற்கான சிகரெட் 35 ஆகியன கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குடலிகம பகுதியில் வசிக்கும் 31 வயதான குறித்த முன்னாள் இராணுவ வீரர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் நீண்ட காலமாக களுத்துறை மாவட்டத்தின் பல பாடசாலைகள் மற்றும் மாலைநேர வகுப்புக்களுக்கு செல்லும் மாணவர்களை இலக்கு வைத்து கேரள கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார்.
பல சந்தர்ப்பங்களில் மாலைநேர வகுப்புக்களில் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கும் நபர்களுடன் இணைந்து சந்தேக நபரும் துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் 10 மாணவர்கள் அடங்கிய குழுவிற்கு கஞ்சா பக்கட் ஒன்று 3000 ரூபாவிற்கு விற்பனை செய்துள்ளதாகவும் அவரிடம் கஞ்சா கொள்வனவு செய்த வேறு நபர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM