20 ஆவது அரசியலமைப்பை வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும் - சஜித் 

Published By: R. Kalaichelvan

23 Sep, 2020 | 11:27 AM
image

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்)

20ஆவது திருத்தம் தேசத்துரோகம். அரசாங்கம் அதனை வாபஸ்பெற்றுக்கொண்டு அனைவரும் கலந்துரையாடி ஜனநாயகத்தை பாதுகாக்கும்வகையிலான திருத்தங்களை கொண்டுவருவதற்கு நாங்கள் ஆதரவளிப்போம்.

அத்துடன் 20ஆவது திருத்தம் தொடர்பில் ஆராய பிரதமரினால் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை எங்கே என கேட்கின்றேன் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கட்டளை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

பாராளுமன்றத்தின் கெளரவத்தை சீரழிக்கும்வகையிலே 20ஆவது திருத்த சட்டமூலம் சபையில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது. 19ஆவது திருத்தத்தில் இருக்கும் ஜனநாயகத்தை பாதுகாத்து உறுதிப்படுத்தும் விடயங்கள் அனைத்தும் இதன்மூலம் இல்லாமலாக்கப்பட்டிருக்கின்றது. ஜனநாயக்தை நேசிப்பவர்கள் எவரும் இதற்கு ஆதரவளிக்கமாட்டோர்கள்.

பணத்துக்காகவும் அமைச்சுப்பதவி மற்றும் ஏனைய வரப்பிரசாதங்களுக்காகவும் காட்டிக்கொடுப்பவர்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் இல்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

அத்துடன் ஜனநாயக ஆட்சி ஒன்றின் கெளரவத்தை பாதுகாக்கும்வகையிலே 19ஐ கொண்டுவந்தோம். இதில் குறைபாடுகள் இருக்கின்றதை ஏற்றுக்கொள்கின்றோம். அதனை திருத்திக்கொண்டு மேலும் உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும். அதற்காக தேசிய பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வழங்கி, அரசியலமைப்பு திருத்தம் மூலம் தேசிய பாதுகாப்பு பேரவை ஒன்றை ஏற்படுத்தவேண்டும். 19இல் இருக்கும் அதிகமானவை ஜனநாயகத்தை பாதுகாக்கும் விடயங்களாகும். அதனை பாதுகாப்பது அனைவரதும் பொறுப்பாகும் என அவர் இதன்போது தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58