லெபனானின் தெற்கு பகுதியில் ஈரான் ஆதரவுடைய ஷியா முஸ்லிம் குழுவான ஹிஸ்புல்லாவின் ஆயுதக் கிடங்கு செவ்வாயன்று வெடித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த மாதம் பெய்ரூட்டை உலுக்கிய சக்திவாய்ந்த வெடிப்பினையடுத்து பதிவாகியுள்ள இந்த சம்பவமானது லெபனான் முழுவதும் மீண்டும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.
செவ்வாயன்று தலைநகர் பெய்ரூட்டுக்கு தெற்கே 50 கி.மீ (30 மைல்) தொலைவில் உள்ள தெற்கு கிராமமான இன் கானாவில் அமைந்துள்ள கட்டிடமொன்றிலேயே இந்த வெடிப்பு நிகழ்ந்ததாகவும், அது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் லெபனான் இராணுவம் தெரிவித்துள்ளது.
ஹிஸ்புல்லாவின் ஊடக அலுவலகம் அல் ஜசீரா செய்திச் சேவையிடம், ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட தொழில்நுட்பப் கோளாறினால் இந்த வெடிப்பு ஏற்பட்டதாகக் கூறியுள்ளது.
வெடிப்பு இடம்பெற்ற இடத்தை சுற்றி ஹஸ்புல்லா அமைப்பினர் பாதுகாப்பு வளைவை அமைத்தமையினால் ஊடகவியலாளர்கள் அப் பகுதிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டதாகவும் மேலுமொர் பாதுகாப்பு வட்டாரம் குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறெனினும் இந்த சம்பவத்தினால் பலர் காயமடைந்திருக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
பெய்ரூட் துறைமுகத்தில் சக்திவாய்ந்த வெடிப்பு நிகழ்ந்து ஏழு வாரங்களுக்குப் பின்னர் இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது.
சுமார் 3,000 டன் முறையற்ற முறையில் சேமிக்கப்பட்ட அம்மோனியம் நைட்ரேட் முன்னதாக பதிவான வெடிப்புக்கு காரணமாக அமைந்தது.
இந்த வெடிப்பில் தலைநகர் பெய்ரூட்டில் சுமாரம் 200 பேர் கொல்லப்பட்டனர், 6,500 பேர் காயமடைந்தனர் மற்றும் பல்லாயிரக்கணக்கான கட்டிடங்களை சேதமாகியமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM